சிவகங்கையில் மாநில அளவில் அமெச்சூர் மல்லர் கம்பம் சங்கம், மாவட்ட மல்லர் கம்பம் சங்கம் ஆகியவை சார்பில் நடந்த போட்டியில் முதன்மை பெற்றவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.கருப்புச்சாமி சான்றுகள் வழங்கினார். உடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் விஸ்வநாதன், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சிவகங்கை மாவட்ட மல்லர் கம்பம் மாவட்டச் செயலாளர் கலைச்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.