districts

தமிழகம், கேரளா இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்

சென்னை, டிச. 1 - தமிழகம், கேரளா இடையே இரு மாநில  அரசு பேருந்துகளும் இயங்கத் தொடங் ்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந் ்துள்ளனர். தமிழகத்தில் இருந்து குமரி மாவட்டம்  வழியாக கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் 19 மாதங்க ளுக்கு பிறகு புதன்கிழமை (டிச. 1) முதல் இரு மாநில அரசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த இரு மாநில அரசு பேருந்து சேவை 19 மாதங்களுக்கு பிறகு தமிழக அரசின் உத்தரவின்படி குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்ல தேவைக்கு ஏற்றார் போல் 50  பேருந்துகள் இயக்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.