மதுரை,ஜூலை 22- எம்.பி.க்களின் பேச்சுகளை சன்சாத் டிவி.யில் இந்தியில் மொழிமாற்றம் செய்து ஒளிபரப்பிய மக்களவைச்செயலகம் மன்னிப்புக்கோர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அவர் தனது “எக்ஸ்” சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: இன்றைய மக்களவையில் ஆங்கிலம் அல்லது தங்களது தாய்மொழியில் பேசிய எம்.பி.க்களின் பேச்சுகளை சன்சாத் டிவி அப்படியே ஒளிபரப்பாமல் இந்தி மொழிமாற்றத்தை மட்டும் ஒளிபரப்பி தனது இந்தி திணிப்பு நடவடிக்கையை துவக்கியுள்ளது.
இந்தி அல்லாத மொழிகளை பேசும் கோடிக்கணக்கான இந்தியர்களை அவமானப்படுத்திய செயலுக்காக மக்களவை செயலகம் மன்னிப்பு கோர வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.