கன்னியாகுமரி, நவ.6- சிஐடியு மாநில மாநாட்டையொட்டி கன்னி யாகுமரியில் நடைபெற்ற கருத்தரங்கில் பால பிரஜாபதி அடிகளார் பேசியதாவது: 200 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மிகப் பெரிய போராட்டத்தைக் கண்டு ஒத்துழை யாமை இயக்கத்தை நடத்திய தாலி அறுத்தான் சந்தை என்ற ஒரு சந்தை இருக்கி றது. தோள் சீலை போராட்டத்தின்போது தாலி அறுந்து விழுந்ததை தொடர்ந்து எந்த பொரு ளையும் தரமாட்டோம் என்று நாட்டில் முதன் முதலாக நடந்த ஒத்துழையாமை இயக்கத் தின் அடையாளம்தான் தாலி அறுத்தான் சந்தை. 80 சதவிகிதம் உள்ள உழைப்பாளி மக்கள் உற்பத்தி செய்த எந்த பொருளையும் தராத தால் அக்ரஹாரம் அதிர்ந்துபோனது உண்ண உணவில்லை. காய்கறி இல்லை. அம்ம னுக்கு படைக்கிற படையல் இல்லை என்ற நிலை வந்தபோதுதான் சமரசம் ஆனார்கள். அன்று கட்டிய தலைச்சீலையை நாங்கள் அவிழ்த்ததில்லை. அன்று போட்ட தோள் சீலையை நாங்கள் மாற்றியதில்லை.
புனிதம் என்பது
போராடித்தான் நாம் புனிதத்தை பெற முடியும். அப்படி ஒரு போராட்டத்தை நடத்த வேண்டிய கொடுமையான காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கோயிலுக்கு போவதற்கு போராடிய நாம் பள்ளிக்கூடத் திற்கு போகவும் போராட வேண்டியது வரும். பள்ளிக்கூடம் நம்மிடமிருந்து பறிக்கப்படு கிறது. ஆயிரம் ஆண்டுகள் அடக்கி ஒடுக்கப் பட்டவர்களுக்கு தந்த உரிமை சமூக நீதி இன்று மறுக்கப்படுகிறது. ஒன்றான சாதி ஒக்க ஒரு இனம்போல வாழ வேண்டும் என்று இந்த மண்ணிலே அய்யா வைகுண்டர் சொன்னார். சாஸ்திர வேத சமயங்கள் ஒன்றாய் நின்று இயங்கிட வேண்டும். வேதங்கள் பல இருக்கலாம். மதங்கள் பல இருக்கலாம். ஆனால் மானு டம் ஒன்றாக இருந்திடல் வேண்டும். அவர்கள் சமமாக வாழ வேண்டும் என்பது இந்த மண் ணின் சித்தாந்தம். தெற்கு எல்லை குமரியில் இருந்து ஆரம் பித்த எந்த காரியமும் தோற்றுப் போன தில்லை. இந்த பொதுவுடமை இயக்கம் இன்று கன்னியாகுமரியில் மையம் கொண்டி ருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு எழுத்தாளர் சங்க மாநாடு நடைபெற்றது. இன்று தொழிற்சங்கத்தின் மாநாடு நடை பெறுகிறது காரணம் என்ன? வெற்றி இங்கி ருந்துதான் ஆரம்பிக்க முடியும். இந்த மண் ணில் பயிர் இருந்தது. அது நாங்கள் உரு வாக்கியது. எங்கள் முன்னோர்கள் உரு வாக்கியது.
என்னை கொல்லப்பார்க்கிறார்கள். ஒரு வேளை கொன்று விட முடியும். ஆனால், என்னை வெல்ல மட்டும் முடியாது. எனது தத்துவம்தான் இந்த தரணியை ஆளப் பிறந்தது. சமத்துவம்தான் இந்த உலகிலே தலை சிறந்தது. மதங்களெல்லாம் போதித் தது சமத்துவத்தைத்தான். ‘‘ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி, நீ தோழன், மங்கை கொழுந்தி’’ எனச் சொன்ன ராமாயணம் தோற்றுப்போகாது. அனைவரும் சமமாக வாழ்வதுதான் நமது வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் சொன்னது. ஆனால், வந்தேறிகள் அதை எடுத்து வைத்துவிட்டு, வேறு கதை அளக்கிறார்கள். மதங்களைப் பற்றி பேச வேண்டும் என்றால் ஆழ்ந்து பார்த்தால் சமத்துவம்தான் மதங்க ளின் அடிநாதம். அனைத்து சமயங்களும் சமத்துவத்தை போதிக்கிறபோது, இந்து என்று சொல்லி மீண்டும் வர்ணாசிரம தர்மத்தை கொண்டு வந்து விடலாம் என்ற நினைக்கிறார்கள். கீதையை பள்ளிக்கூட பாடத்தில் வைக்க வேண்டும் என்று ஏன் சொல்கிறான் என்றால், கண்ணன் சொல்லாத ஒரு சுலோகம் அதில் இருக்கிறது.
பிரகிருதி யில் இருந்து நான் நால் வர்ணத்தை படைத் தேன் என்று கண்ணன் சொன்னான் என்று கூறி னால், இந்த மண்ணின் தெய்வம் அறிவில்லா ததா? அல்லது மடமையில் குடிகொண்டதா? இதெல்லாம் வடக்கிலிருந்து வந்தவர்கள் மதத்தை கையில் எடுத்துக்கொண்டு மடை மாற்றம் செய்ததுதான். மதத்திற்கு என ஒரு சாதியை வைத்துக் கொண்டு, ஒரு மொழியை வைத்துக் கொண்டு நம்மை அடிமைப்படுத்தினர். இன்னொரு முறை நாம் அடிமைப்பட்டுவிடக் கூடாது. மத ஆளுகையை நாம் கையில் எடுக்க வேண்டும். செங்கொடியை தாங்கி யிருக்கும் நீங்கள்தான் இந்தியாவைக் காக்க வேண்டும். இந்தியாவை காக்க வேண்டும் என்றால் இந்து ஆலயங்களை காக்க வேண் டும். ஆலயத்தில் வேலை பார்க்கிறவர் களுக்கு தொழிற்சங்கம் ஆரம்பிக்க வேண் டும். கோயில் நமக்கு சொந்தம்; கோயிலை நமதாக்க வேண்டியது நமது கடமை; கோயிலை பொதுவாக்க வேண்டியதை தான் அந்த கடமை. இவ்வாறு அவர் பேசினார்.