விருதுநகர், செப்.11- விருதுநகரில் 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்க ளைக் கல்லூரி மற்றும் தொ ழிற் கல்வியில் சேர்த்திட கல்விக்கடன் வழங்கும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத் தில், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 97 சதவீத மாணவர் கள், உயர்கல்வியில் சேர்க் கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு உடனடித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களைக் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியில் சேர்க்கும் வித மாக உயர்கல்வி வழிகாட்டு தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 37 மாணவர்கள் பங் கேற்றனர். குடும்ப சூழ்நிலை, பொருளாதாரம், சரியான வழிகாட்டியின்மை, பாடப் பிரிவு கிடைக்காத நிலை போன்ற காரணங்களால் உயர்கல்வி தொடர முடியா மல் இருப்பதாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். பின்னர், அரசின் திட்டங்கள், ஊக்கத்தொகை, வேலை வாய்ப்பு, மதிப்பெண்க ளுக்கு ஏற்ப பாடப்பிரிவு துறைகளை தேர்ந்தெடுப் பது உள்ளிட்டவை குறித்த ஆலோசனைகளை மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார். முடிவில், 7 மாணவர்கள் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 8 மாணவர் கள் தொழிற்பயிற்சி நிலை யங்களிலும் சேர்க்க நடவ டிக்கை எடுக்கப்பட்டது. இவர்களுக்கான கல்வி கட்டணம் விருதுநகர் கல்வி அறக்கட்டளையின் மூலம் செலுத்த ஆட்சியர் உத்தர விட்டார். இந்நிகழ்வில், மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா, மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.