districts

img

கல்விக்கடனுக்கான சிறப்பு முகாம்: மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள சு.வெங்கடேசன் எம்.பி அழைப்பு.

கல்விக்கடனுக்கான சிறப்பு முகாமில், 28 வங்கிகள் பங்கேற்க உள்ளதாகவும், மாணவர்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென சு.வெங்கடேசன் எம்.பி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, மதுரை மாவட்டத்தில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்த மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் உயர்கல்வி பெறுவது நின்றுவிடக்கூடாது.  

அதற்காக இந்த கல்வியாண்டில் மதுரை மாவட்ட  மாணவர்களுக்கு 500 கோடி ரூபாய் கல்விக்கடனை பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை துவக்கினோம்.  

மதுரை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் , வங்கித்துறை அதிகாரிகள் & கல்வித்துறை அதிகாரிகள் அனைவரும் ஒத்துழைப்போடு கடந்த 2 மாதங்களாக இப்பெரும் பணி நடைபெற்று வருகிறது.  

இதுவரை மூன்று முறை இதற்கான கூட்டங்களை நடத்தியுள்ளோம். சுமார் 55 கோடி ரூபாய் கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது.  இன்னும் ஏராளமான மாணவர்களுக்கு தடையில்லாமல் கல்விக்கடன் கிடைத்திட தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.  

அதன் ஒரு பகுதியாக வருகிற அக்டோபர் 20 ஆம் தேதி மதுரை அமெரிக்கன் கல்லூரியில்,  கல்விக்கடனுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.  இம்முகாமில் 12 தேசிய வங்கிகள் , 16 தனியார் வங்கிகள் உள்ளிட்டு 28 வங்கிகள் பங்கேற்கின்றன.

இன்னும் கல்விக்கடன் கிடைக்கப்பெறாத, கடன்  தேவைப்படுகிற  மாணவர்கள் இம்முகாமினை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டுமென மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்  கேட்டுக்கொண்டுள்ளார். 

;