சிவகங்கை,டிச.11- திருவண்ணாமலையில் மாநில அளவிலான தடகளப் போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை நகர் ஆக்ஸ்போர்ட் மெட்ரிகுலே சன் மேல்நிலைப்பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி பிரித்திகா 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கமும் ,100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண் கலப்பதக்கமும் வென்றார். இவர் சிவகங்கை நகர்மன்ற உறுப்பினர் சாரதி கமல் மகள் ஆவார். சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரை ஆனந்த், விளையாட்டில் சாதனை படைத்த மாணவி பிரித்திகா வின் வீட்டிற்கு சென்று பாராட்டி வாழ்த்தினார். மேலும் பள்ளி யின் தாளாளர் சியாமளா வெங்கடேசன், பள்ளியின் முதல்வர் பிரனேஷ்குமாரி ஆகியோரும் பாராட்டினர்.