districts

தங்க நகைக் கடனுக்கு புதிய நிபந்தனைகள்

சிவகங்கை, ஜூன் 19- சிவகங்கை நகராட்சியை வளர்ச்சி அடைந்த நகரமாக மாற்ற துணை முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று  சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த்  மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது: சிவகங்கை நகரமானது தொன்மை வாய்ந்த மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நகரமாகும். இந்நகரைச் சுற்றி வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டி, காளையார்கோவில் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கீழடி போன்ற இடங்கைளை சுற்றிப் பார்க்க தினந்தோறும் வருகைதரும் பொதுமக்களின் எண்ணிக்கை சுமார் 5000க்கு  மேல் உள்ளது. இதனால் நெரிசல் அதிக அள வில் உள்ளது. 22.5.1998 முதல் நகராட்சி யாக செயல்பட்டு வருகிறது. தற்போது வாணி யங்குடி, காஞ்சிரங்கால் ஆகிய பஞ்சாயத்து கள் சிவகங்கை நகராட்சியோடு இணைக் கப்பட்டுள்ளது. எனவே புதிதாக 100 கிலோ மீட்டர் நீளத்திற்கு கழிவு நீர் கால்வாய் அமைத்து தர வேண்டும். சிவகங்கை நகராட்சி பகுதியில் ஏற்க னவே 2006-2007ம் ஆண்டு பாதாளச் சாக்கடை  கழிவுநீர் குழாய்கள் 50 கிலோ மீட்டர் நீளத்  திற்கு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அபி விருத்தி பகுதிகளில் கூடுதலாக 30 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாதாளச் சாக்கடை கழிவு நீர் குழாய்கள் அமைத்து தர வேண்டும். நகரின் மைய பகுதிகளில் அமைந்துள்ள  தொன்மை வாய்ந்த மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க தெப்பக்குளத்தின் சுற்றுச் சுவர் சேதம டைந்து மிகவும் மோசமான நிலையில் உள்  ளது. இந்த தெப்பக்குளத்தை மேம்படுத்த வேண்டும். சிவகங்கை நகராட்சி பகுதியில் செவிலி யர் பயிற்சி கல்லூரி இல்லை. இதனால் மாண விகள் வெளியூர் சென்று பயிற்சி மேற் கொள்வதை தவிர்க்க சிவகங்கை நகரில் அமைத்து தர வேண்டும். இதற்கான கட்டிட  வசதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை வளாகத்தில் கட்டப்பட்டு உள்ளது. தற்போது நகராட்சி அலுவலகம் எதிரில்  தேசிய நெடுஞ்சாலைத் துறையின் பாலம் அமைந்துள்ளதால் பொதுமக்கள் வந்து போவதற்கு சிரமமாக உள்ளது. எனவே புதிய  நகராட்சி அலுவலக கட்டிடம் அமைத்து தர வேண்டும். 27 வது வார்டில் அமைந்துள்ள வடுவன்  குளம் ஊரணியை தூர் வாரி சீரமைத்து நடை பாதை அமைத்து தர வேண்டும். நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளிலும் குடிநீர் விநியோகம் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.  தினந்தோறும் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய நகராட்சிக்கு சொந்த மான செட்டி ஊரணியில் ஆழ்துளை கிணறு  அமைத்து  11 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சச மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியுடன் அமைத்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.