districts

img

இரண்டு ஆண்டுகளாக தெருவில் தேங்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்: நடவடிக்கை கோரி மக்கள் மறியல்

மதுரை, மார்ச் 15- மதுரை மாநகராட்சி 65-ஆவது வார்டு கோச்சடை முத்தையா கோவில் இரண்டாவது தெரு பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதாள சாக் கடை கழிவுநீர் தெரு பகுதிகளில் தேங்கு வதால் சுகாதார சீர்கேடு மற்றும் பொது மக்கள் வாகனங்களை ஓட்டி செல்வ தற்கும் நடந்து செல்வதற்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது.  இந்தநிலையில் செவ்வாயன்று அப்பகுதியில் முழங்கால் அளவிற்கு கழிவுநீர் தேங்கி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத அள விற்கு பெரும் சுகாதார சீர்கேடு ஏற் பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள மாநகராட்சி ஊழியர்களிடம் தொடர்பு கொண்டு அப்பகுதி மக்கள் பேசியபோது, சரி செய்து விடுகிறோம் என்று கூறியும் நீண்ட நேரமாக கழிவு நீரை அகற்றுவதற்கு ஊழியர்கள் வர வில்லை.  இந்நிலையில், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் டோக் நகர் சாலை யில் மறியலில் ஈடுபட்டனர்.

இதை யறிந்து அங்கு வந்த எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேசி உடனடியாக கழிவுநீரை அகற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்கிறோம் என்று கூறி மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கழிவுநீர் ஏற்று வாகனத்தை வர வைத்து தேங்கியிருந்த கழிவுநீரை அப்பு றப்படுத்தினர்.  இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகுதி குழு உறுப்பினர் தங்கவேல் கூறுகை யில், கடந்த 2 ஆண்டுகளாக இப்பகுதி யில் பாதாள சாக்கடை கழிவு நீர்  தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கவ னத்திற்கு பலமுறை கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் இல்லை.  மேலும் முத்தையா கோவில் 2-ஆவது தெரு துவக்கத்திலிருந்து கடைசிவரை உள்ள பாதாள சாக்கடை மூடிகள் அனைத்துமே மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் பாதாள சாக்கடை மூடி இருக்கும் இடத் தில் மாட்டிக் கொள்வது மட்டுமல்லா மல் நடந்து செல்பவர்கள் கீழே விழுந்து செல்லக்கூடிய நிலை ஏற்படுகிறது.  எனவே மாநகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை மூடிகளையும் மற்றும் இணைப்புகளை யும் சீரமைத்து சீரான முறையில் கழிவு நீர் செல்வதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து பொதுமக்களை சுகாதார சீர் கேட்டில் இருந்து பாதுகாத்திட வேண்டும் என்று கூறினார்.