அம்பத்தூர், ஜூன் 21- அம்பத்தூர் புதூர் பகுதியில் உள்ள சேதுபாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 2022ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். 12ஆம் வகுப்பு தேர்வில் சேதுபா ஸ்கரா பள்ளியிலிருந்து பங்கேற்ற 734 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ராஜராஜேஸ்வரி என்ற மாணவி 600க்கு 596 மதிப்பெண்கள் பெற்று பள்ளி யில் முதல் இடத்தையும், வி.குகன் 595 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், சியாம் அர்ஜூன், ஆர்.ஆர்.ரேஷிகா, டி.ரேஷ்மா, எச்.யுவஸ்ரீ, ஆர்.கவுதமி ஆகியோர் 594 மதிப் பெண்கள் பெற்று 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். 107 மாணவர்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பள்ளியின் தாளாளர் சேதுகுமணன், முதல்வர் எஸ்.பி.பி.செல்வகுமார் ஆகி யோர் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற் றோர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்தனர்.