districts

img

சிபிஎம் இராஜாக்கமங்கலம் ஒன்றிய செயலாளராக எஸ்.டி.ராஜ்குமார் தேர்வு

நாகர்கோவில், அக்.19- கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்க லம் ஒன்றிய  சிபிஎம்  மாநாடு ஈத்தாமொழியில் நடைபெற்றது. இதில் கே.பி.பெருமாள், நாகராஜன் தலைமை தாங்கினர், எஸ். தாமோதரன் கொடியேற்றி வைத்தார், மாவட்ட செய லாளர் ஆர் செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் என்.முருகேசன், என்.உஷா பாசி, என்.எஸ். கண்ணன், எஸ்.சி.ஸ்டாலின் தாஸ் உள்ளிட்டோர் பேசினர். ஒன்பது பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. செயலாள ராக எஸ்.ற்றி.ராஜ்குமார் தேர்வு செய்யப்பட்டார். இராஜாக்கமங்கலம் ஒன்றியத்திலுள்ள உள்ள கணியாங்குளம்,புத்தேரி, எள்ளுவிளை, இராஜாக்க மங்கலம், தர்மபுரம், பள்ளம், மணக்குடி கேச வன்புத்தன்துறை, மேல சங்கரன்குழி உள்ளிட்ட ஊராட்சிகளை நாகர்கோ வில் மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும். இராஜாக்கமங்கலம் பகுதியில் சுமார் 1000 ஏக்கர் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. இவ்விடத்தில் அய்யா வைகுண்டர் பெய ரில் பல்கலைகழகம் அமைத் திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். இராஜா க்கமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;