பத்தனம்திட்டா, ஏப்.30- சபரிமலை வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின குடும்பங்களுக்கு நிலம் சொந்த மாக்கப்படவுள்ளது. பழங்குடியின குடும் பங்களுக்கு என ஒதுக்கப்பட்ட நிலத்தை வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறையினர் தலைமை யிலான அதிகாரிகள் குழுவினர் சனிக்கிழ மையன்று (ஏப்.30) பார்வையிட்டனர். ளாஹா மஞ்சத்தோட்டுடன் பழங்குடி யினர் காலனியை அடைந்த அதிகாரிகள் அங்குள்ள மக்களுக்கு வழங்கப்படவுள்ள நிலத்தை பார்வையிட்டனர். இரண்டு வாரங்களில் கணக்கெடுப்புப் பணி துவங்கும் என அவர்கள் தெரிவித்தனர். வனத்துறையினர் தலைமையில் எல்லை நிர்ணய கணக்கெடுப்புப் பணி மே 4 அன்று தொடங்குகிறது. ரன்னி வனச்சர கத்திற்குட்பட்ட சபரிமலை வனப்பகுதியை உள்ளடக்கிய ளாஹா மஞ்சத்தோடு, சாளக்காயம், பிளந்தோடு, அட்டத்தோடு, நிலக்கல், பிளாப்பள்ளி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 32 குடும்பங்கள் ராஜம்பாறை வனச் சரக எல்லைக்குள் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். 100க்கும் மேற்பட்டோர் வசிக்கும் மஞ்சத்தோடு கிராமத்தை மையமாக கொண்டு பழங்குடியினர் குடியிருப்பு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. குடியிருப்புக்கு ஏற்ற ஒரு ஏக்கர் பரப்பளவு நிலம் அளவிடப்பட்டு மதிப்பி டப்படுகிறது. வன உரிமைச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட அளவு நிலம் பெற அவர்களு க்கு உரிமை உண்டு. அதன் முதல் படியாக கணக்கெடுப்பு நடவடிக்கை தொடங்கி யுள்ளது.