திண்டுக்கல், ஏப்.19- பழனியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் அதன் அமைப்பினர் உச்சநீதிமன்ற நிபந்தனையை மீறி தடிகளுடன் கலந்து கொண்டனர். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் பழனி உள்ளிட்ட 45 இடங் களில் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளித் தது. இதற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யு மாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு அரசை வலி யுறுத்தியது. இதனையடுத்து தமிழ்நாடு அரசும் உச்சநீதிமன் றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டில் 12 கடுமையான நிபந்தனைகளுடன் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட் டம் நடத்த அனுமதி அளித்தது. சாதி, மதம் குறித்து தவறாக பேசக்கூடாது. தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக எந்த கருத்தையும் பேசக்கூடாது. நாட் டின் இறையாண்மைக்கும், ஒரு மைப்பாட்டிற்கும் ஊறு விளை விக்கும் எந்த ஒரு செயலிலும் ஈடு படக்கூடாது. மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் பேரணி மற்றும் நிகழ்ச்சி நடத்த வேண்டும். கம்பு, மற்றும் ஆயுதங்கள் எதையும் கைகளில் ஏந்தி செல்லக்கூடாது. அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே பேரணி செல்ல வேண் டும். பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் அதை பேரணி ஏற் பாட்டாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த நிபந்தனைகள் உறுதி மொழிகள் மீறப்பட்டால் தேவையான சட்ட நடவடிக்கை கள் எடுக்கப்படும் என்று உச்சநீதி மன்றம் எச்சரிக்கை விடுத்திருந் தது.
ஆர்எஸ்எஸ்சுக்கு ஆதரவாக காவல் அதிகாரிகள்
ஆனால் இந்த விதிமுறை கள் பழனியில் நடைபெற்ற ஊர்வ லத்தில் கடைபிடிக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது. அனு மதிக்கப்பட்ட வழித்தடத்தில்தான் பேரணி செல்ல வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் நிபந்தனை பழனியில் மீறப்பட்டுள்ளது. அதா வது பழனி முருகன் கோவில் அடி வாரத்தில் உள்ள பாதவிநாயகர் கோவில் முன்பிருந்து ஊர்வலம் துவங்கியது. இந்த இடத்தில் எந்த அரசியல் கட்சிகளுக்கும் அனு மதி இல்லை. அப்படி இருக்கை யில் இந்த இடத்தை ஆர்.எஸ்.எஸ். காரர்கள் தேர்வு செய்தனரா? அல்லது பழனி நகர போலீசார் தேர்வு செய்தனரா? என்ற கேள்வி எழுகிறது. மற்ற கட்சிகளுக்கு இல் லாத சலுகை ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு மட்டும் ஏன் என்ற கேள்வி எழுகிறது. இரண்டாவது காவல்துறையில் உள்ள காவல் உயர் அதிகாரிகள் ஆர்.எஸ்.எஸ்க்காக மட்டும் ஏன் சலுகை காட்டினார்கள்?
போக்குவரத்துக்கு இடையூறு-மக்கள் பாதிப்பு
பொதுமக்களுக்கும் போக்கு வரத்துக்கும் எந்த இடையூறும் இல் லாதபடி பேரணி நடக்க வேண்டும் என்பது நிபந்தனை. பாதவிநாயகர் கோவில் என்பது பழனி முருகன் கோவில் முன்புறத்தில் உள்ள இடமாகும். கோவிலுக்கு வரும் பக் தர்களுக்கு இந்த பேரணி இடை யூறு தான். கோவிலுக்கு செல்ல முடி யாமலும், கோவிலுக்குள் சென்ற வர்கள் வெளியில் வந்து பேருந்து நிலையத்திற்கு செல்ல முடியாம லும் தவித்தனர். மேலும் போக்கு வரத்து இடையுறு ஏற்படும் வகை யில் பேருந்து நிலையம் வழியாக பேரணி சென்றது. போக்குவரத்து மாற்றப்பட்டது. இதனால் பயணி கள் பொதுமக்கள் அவதிப்பட்ட னர். மேலும் பேரணியில் சென்ற ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஆங் காங்கே நின்று விட்டனர். இதனால் பேருந்துகள் சாலையை கடக்க ஒரு மணி நேரம் ஆகியது. மேலும் பேரணி பெரிய பள்ளி வாசல் வழி யாக செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். எப்படிப்பட்ட இயக் கம் என்பதை பற்றிய துளி ஞான மும் காவல்துறைக்கு இல்லை என்பதையே காட்டுகிறது. இந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலப்பாதை யை அவர்களே முடிவு செய்து போலீசாரிடம் அனுமதி கேட்டதை அப்படியே போலீசார் ஒப்புக் கொண்டதாகவே தெரிகிறது. பொதுவாக ஆர்.எஸ்.எஸ், உள் ளிட்ட அமைப்புகளிடம் பழனி போலீசார் நீக்குபோக்காக நடந்து கொள்வது என்பது பெரும் ஆபத் தில் போய் முடியும். இலமு, திண்டுக்கல்