districts

img

சாலைப்பணியாளர்கள் வாழைக்கன்று நட்டு ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஏப்.9- 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கிட வேண்டும்.  தொழில் நுட்பக் கல்வி திறன் பெறாத சாலைப்பணியாளர் களுக்கான ஊதியம் ரூ.5200, ரூ.20200, தர ஊதியம் ரூ.1000 வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி  தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்து திண்டுக்க்ல நெடுஞ்சாலைத்துறை அலு வலக வளாகத்தில் வாழைமரக் கன்றுகளை நட்டு சாலைப்பணி யாளர்கள்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டம் நடத்தினர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இராஜா தலைமை வகித்தார். சங் கத்தின் மாநில துணைத்தலைவர் ராஜமாணிக்கம், ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.ஜெய சீலன், அரசு ஊழியர் சங்க  மாவட்டச்செயலாளர் விவேகா னந்தன், சீனிவாசன், சேகர், ஜெயக்கொடி, அழகர்சாமி, முரு கானந்தம் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.