கடமலைக்குண்டு, மே 11- தேனி மாவட்டம், கடமலை மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூல வைகையாறு உற்பத்தியாகிறது. வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் மூல வைகையாற்றில் நீர்வரத்து காணப்படும். கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள 300-க்கும் மேற் பட்ட கிராமங்களுக்கு மூல வைகை யாறு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. மேலும் மூல வைகையாற்றை சார்ந்து ஏராளமான ஏக்கர் பரப்பள வில் விவசாயம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, தங்கம்மாள்புரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அனைத்தும் மூல வைகையாற்றில் கலந்து வருகிறது. இதனால் மூல வைகையாற்று நீர் மாசடைந்து வரு கிறது.
ஒவ்வொரு வருடமும் மார்ச், ஜூலை மாத இறுதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை மூல வைகை ஆறு வறண்ட நிலையில் காணப் படும். அதுபோன்ற நேரங்களில் மூல வைகையாற்றில் கழிவுநீர் குளம் போல தேங்கி காணப்படும். பின்னர் மழை பெய்து நீர் வரத்து ஏற்படும் காலங்களில், அதனுடன் கழிவு நீரும் சேர்ந்து விடுகிறது. இத னால் குடிநீர் மாசடைகிறது. இந்த கழிவுநீர் கலந்த குடிநீரை குடிப்ப தால் பொதுமக்களுக்கு டைபாய்டு காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள் ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின் றன. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடமலைக் குண்டு கிராமத்தில் வைகை ஆற் றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்பட்டது. தற்போது தடுப்ப ணையில் நீர் தேங்கி காணப்படு கிறது. இந்த சூழ்நிலையில் கட மலைக்குண்டுவில் இருந்து வெளி யேற்றப்படும் சாக்கடை கழிவுநீர் தடுப்பணையில் தேங்கியுள்ள நீரு டன் கலந்து தேங்கி வருகிறது. தொடர்ந்து ஒரே இடத்தில் நீர் தேங்கி யதால் அதிலிருந்து கடும் துர்நாற்றம் வெளிப்படுகிறது. இதனால் ஆற்றங்கரை ஓரமாக வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிர மப்பட்டு வருகின்றனர். எனவே மூல வைகையாற்றில் கழிவு நீர் கலப் பதை தடுக்கும் வகையில் கட மலைக்குண்டு உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையம் அமைக்க வேண் டும். அல்லது ஆற்றங்கரை ஓர மாக பெரிய பள்ளங்கள் தோண்டி அதில் கழிவு நீரை தேக்கி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக் கள் மத்தியில் கோரிக்கை எழுந் துள்ளது.