districts

img

வார்டு உறுப்பினரை நீக்கக் கோரிக்கை

விருதுநகர், மே 9- விருதுநகரில் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு செவிலியர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடை அமைப்பதை எதிர்த்து அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். விருதுநகர் நகராட்சி 15-ஆவது வார்டுக்குட்பட்டது இனிமை நகர். இங்குள்ள தனியார் இடத்தில் அரசு மது பானக் கடை அமைப்பதற்கான ஏற்பாடு கள் நடைபெற்று வந்தன. தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது:- இனிமை நகர் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் தங்கும் விடுதி உள்ளது. மேலும், அரசு செவிலியர் பயிற்சி கல்லூரி யும் உள்ளது. குடியிருப்புகள் மிக அருகில் உள்ளது. இதனால், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். அமைதி சீர்குலைந்து சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, டாஸ்மாக் கடை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.