districts

ஓய்வூதியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரம் வழங்க கோரிக்கை

கும்பகோணம், அக்.17 - தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க ஆறாவது தஞ்சை மாவட்ட பேரவை கும்பகோணம் கோவிந் தன் மஹாலில் நடைபெற்றது. மாவட்ட பேரவைக்கு மாவட்டத்  தலைவர் இரா.கலியமூர்த்தி தலைமை வகித்தார். ஓய்வூதி யர் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.ஆறுமுகம் மாநாட்டை  துவக்கி வைத்து பேசினார். மாநாட்டில் ஓய்வூதியர் மற்றும் குடும்ப உறுப்பினர்க ளுக்கு நடப்பாண்டிற்கு கருவூலங்களில் வாழ்வுரிமை சான்று  வழங்குவதிலிருந்து விலக்கு அளித்த தமிழக அரசுக்கும் மாநில மையத்திற்கும் நன்றி தெரிவித்தனர். ஓய்வூதியர்கள் மற்றும்  குடும்ப ஓய்வூதியர்கள் அனைவருக்கும் பண்டிகை முன்பணம்  10 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப  ஓய்வூதியர்கள் கருவூலங்களில் ஒருங்கிணைந்த நிதி மற்றும்  மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தை அமுல்படுத்தி உள்ளதால்  பண பலன்களை வழங்கும் போது நிலுவைத் தொகை கிடைக்காமல் உள்ளது. இதனை கலைவதற்கு பழைய திட்ட த்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

;