districts

img

குடியரசு தின விழா

சின்னாளப்பட்டி பேருராட்சி சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் செயல் அலுவலர் நந்தகுமார், தலைமை எழுத்தர் கலியமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் கணேசன் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கலந்து கொண்டனர் ஆத்தூர் யூனியன் அலுவலகத்தில் சேர்மன் மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர். சித்தையங்கோட்டையில் செயல் அலுவலர் ஜெயமாலு, பட்டிவீரன்பட்டியில் செயல் அலுவலர் உமா சுந்தரி, சேவுகம்பட்டியில் செயல் அலுவலர் கீதா, அய்யம்பாளையத்தில் செயல் அலுவலர் பாலசுப்ரமணியன்,அம்மையநாயக்கனூரில் செயல் அலுவலர் ஜெயலெட்சுமி, கன்னிவாடியில் செயல் அலுவலர் யுவராணி, நிலக்கோட்டையில் செயல் அலுவலர், ஸ்ரீராமபுரத்தில் செயல் அலுவலர் விஜயாவும் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.

;