மதுரை, ஜூலை 15- பொன் விழா காணும் மூட்டா பேரியக்கத்தின் மூத்த தலைவர் பேராசிரியர் வெ.சண்முகசுந்தரம் நினைவு நாள் மற்றும் புதுப் பிக்கப்பட்ட மதுரை அலு வலக திறப்பு விழா நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மூட்டா மண்டலத் தலைவர்கள் எஸ். ரமேஷ்ராஜ், இ.பி. ஞானேஸ்வரன் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் அய்பெக் டோ (AIFUCTO) தலைவர் பேராசிரியர் மூட்டா பி. பார்த்தசாரதி கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றி னார். முதலாம் மண்டலப் பொ ருளாளர் ஜோ. இராபர்ட் திலீபன் நன்றி கூறினார். மதுரை துணை மேயர் தி. நாகராஜன் புதுப்பிக்கப் பட்ட மதுரை மூட்ட அலுவல கத்தை திறந்து வைத்து, சிறப்புரையாற்றினார். மூட்டா மத்திய பொருளாளர் அ.தி.செந்தாமரைகண்ணன் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கி உரையாற்றினார். மூட்டாவின் மூத்த பேரா சிரிய தலைவர்கள் ஆர். கிருஷ்ணமூர்த்தி, பெ.விஜய குமார், பி. பார்த்தசாரதி, ஜி சி மனோகரன், ச.விவேகா னந்தன் ஆகியோர் வாழ்த்து ரை வழங்கினர். துணை மேயர் தி. நாக ராஜன் பேசுகையில், அனைத்துத்துறைகளும் தனியார்மயம் ஆக்கப்பட்டு வரும் நெருக்கடியான நிலை யில் புதிய கல்விக் கொள்கை யின் ஆபத்துக்களை பல ருக்கும் தெரியப்படுத்த வேண்டும். இந்த சூழலை ஆசிரியர்களாகிய நீங்கள் மாணவர்கள், பொது மக்க ளிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மூட்டா இரண் டாம் மண்டலப் பொருளா ளர் அ.வில்சன் பாஸ்கர் நன்றி கூறினார்.