பழனி, டிச.10- காட்டுப்பன்றிகளால் நாசப்படுத்தப்பட்ட பயிர் களுக்கு நிவாரணம் வழங் கக்கோரி பழனியில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தில் கீரனூர், மானூர், தாளையம் உட்பட 15 கிராமங்களில் சண்முக நதி ஓடும் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களில் தென்னங்கன்று, மக்காச் சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர் வகைகளை விவசா யம் செய்து வருகின்றனர். காட்டு பன்றிகள் இந்த விவ சாய நிலங்களில் புகுந்து தென் னங்கன்றுகளை பிடுங்கி எறிந்தும் கரும்பு மக்காச் சோளம் உள்ளிட்ட விளைந்த பயிர்களை சேதப்படுத்தி யது. இதனால் பல நூற்றுக் கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் விவசாயம் நாசம் அடைந்துள்ளது. நாசம டைந்த பயிர்களுக்கு நிவார ணம் வழங்க வேண்டும். காட் டுப் பன்றிகளை விரட்ட வேண் டும் என்று வலியுறுத்தி தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பழனி வனச்சரக அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் கே. சின்னத்துரை தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் எம்.ராமசாமி கோரிக்கை களை விளக்கிப் பேசினார். பின்னர் பழனி வனச்சரக அலு வலர் பழனிகுமாரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது.இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வனச்சரக அதி காரி அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.