districts

img

அனைத்து பாசன கண்மாய்களுக்கும் வைகை தண்ணீர் செல்லும் வகையில் கால்வாய்களை சீரமைத்திடுக!

இராமநாதபுரம், ஜூன் 4- இராமநாதபுரம் மாவட்டத்தில் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் ரூ.30.50 கோடி மதிப்பீட்டில் வைகை ஆற்றிலிருந்து பாசன கண்மாய்களுக்கு செல்லும் கால்  வாய்கள் சீரமைக்கும் பணி நடைபெறு வதை பார்வையிட்டு ,வரும் காலங்களில் வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் வீணாக கடலுக்கு செல்லாமல் அனைத்து பாசன  கண்மாய்களுக்கும் செல்லும் வகையில்  கால்வாய்களை சீரமைத்திட பொதுப் பணித் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் அறி வுறுத்தினார். இராமநாதபுரம் மாவட்டம்,  பரமக்குடி வட்டம் மற்றும் இராமநாதபுரம் வட்டத்தில் ஜூன் 3 அன்று பொதுப்பணித் துறையில் நீர்வள நிலவள திட்டத்தில்  ரூ. 30.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும்  மராமத்து பணிகளை மாவட்ட ஆட்சித்தலை வர் பா.விஷ்ணு சந்திரன்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்  தலைவர்  பரமக்குடி வட்டம், பாண்டியூர், சிறகிக்கோட்டை பகுதிகளுக்கு வைகை ஆற்றிலிருந்து பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லக்கூடிய கால்வாய்கள் மற்றும் வைகை ஆற்றில் கரையோர பகுதி களில் கரைகள் வலுப்படுத்தும் பணி, தடுப்ப ணைகள் கட்டும் பணி மற்றும் பாசன கண்மாய்களில் கழுங்குகள், மடைகள் புதிதாக கட்டும் பணி ரூ.30.50 கோடி மதிப்பீட்  டில் நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணிகளை வரும் மழைக்காலத்திற்குள் விரைந்து முடித்திட வேண்டும்.

தொடர்ந்து, இராமநாதபுரம் மாவட்டம், தொருவளூர், காரேந்தல் பகுதி களுக்கு சென்று வைகை ஆற்றிலிருந்து பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் வரக்கூடிய கால்வாய்களை பார்வையிட்டு மழைக்காலம் துவங்குவதற்குள் கருவேல் மரங்களை அகற்றி கால்வாய்களை சீர மைத்திட பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வைகை ஆற்றிலிருந்து மழைக்  காலங்களில் வரக்கூடிய தண்ணீர் இராம நாதபுரம் பெரிய கண்மாய்க்கு சென்று முழு  கொள்ளளவை எட்டியதும் அதனை ஒட்டி யுள்ள கிராம பகுதிகளில் உள்ள பாசன  கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு சென்று முழுமையாக நிரப்பிட வேண்டும்.  அதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிடுதல் வேண்டும். வைகை ஆற்றின் கடைசி பகுதி இது என்ப தால் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கின்  றன. அதை தடுத்து விவசாயிகளுக்கு தேவையான அளவு பாசன கண்மாய் களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். வரும் காலங்களில் இப்பகுதி யில் பாசன கண்மாய்களுக்கு போதியளவு தண்ணீர் நிரப்பிட உரிய பணிகளை மேற்  கொள்ள பொதுப்பணித்துறை அலுவ லர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறி வுறுத்தினார். இந்த ஆய்வில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஆனந்த் பாபு,  இராம நாதபுரம் வட்டாட்சியர் சுரேஷ்குமார், பர மக்குடி வட்டாட்சியர் ரவி மற்றும் அரசு அலு வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

;