districts

img

நில அளவர் தேர்வில் முறைகேடா? விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 26- கடந்த நவம்பர் மாதம் நடை பெற்ற நில அளவர், வரைவாளர் களை தேர்வு செய்வதற்கான டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வில் ஒரே  மையத்தில் தேர்வு எழுதிய ஏறக் குறைய 700 பேர் தேர்ச்சி பெற்றி ருப்பது குறித்து டிஎன்பிஎஸ்சி விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியு றுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள பதிவில், ‘’தமிழ்நாடு அரசுத்துறைகளுக்கு 1089 நில அளவர், வரைவாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏறக்குறைய 700 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். வாய்ப்பில்லாத இந்த சாதனை ஐயத்தை ஏற்படுத்துகிறது. மொத்தமாக தேர்ச்சி பெற்ற 700 பேரும் காரைக்குடியில் உள்ள மையத்தில் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களின் பெரும்பான்மையினர் காரைக்குடியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற வர்கள் என்பது ஐயத்தின் அளவை உயர்த்தியிருக்கிறது.

வெற்றி பெற்றவர்கள் முறை யாக பயின்று திறமையால் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் மகிழ்ச்சி தான். ஆனால், மொத்த பணி யிடங்களில் 70 விழுக்காடு இடங்களுக்கு ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவது இயற்கைக்கு எதிரானது என்ப தால் அது குறித்த உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். 2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நான்காம் தொகுதி தேர்வில் முதல் 100 இடங்களில் ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழு திய 35 பேர் இடம் பெற்றிருந்தது குறித்த ஐயத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய போது பெரு மளவில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது. நில அளவர் தேர்விலும் அத்த கைய முறைகேடுகள் ஏதேனும் நடை பெற்றதா? என்பதை நாட்டுக்கு தெரி விக்க வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, இது குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்து கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.