districts

img

மாதாந்திர உதவித் தொகை, வீட்டுமனை வழங்குக!

மதுரை, மே 8-  மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாதாந்திர உதவித்தொகை உத்தரவு நகல் பெற்ற சுமார் 600 மாற்  றுத்திறனாளிகளுக்கு 8 மாதங்களாக உதவித் தொகை கிடைக்கவில்லை உடனடியாக மாற்றுத்திற னாளிகளுக்கு  மாதாந்திர உதவித் தொகை வழங்க  வேண்டும். மாற்றுத்திற னாளிகளுக்கு இலவச வீட்டு  மனை கேட்டு மனு செய்யப்  பட்டு இருந்த நிலையில் தாலுகா அளவில் அதற்கான விசாரணை செய்து முடிக் கப்பட்டுள்ளது. இன்னும் இலவச வீட்டு மனை வழங்க வில்லை. விசாரணை முடிந்த வர்களுக்கு உடனே இலவச  வீட்டு மனை அளிக்க  வேண்டும். மாற்றுத்திற னாளிகள் குடும்ப அட்டை யை (ரேஷன் கார்டு) AAY கார்டாக மாற்றித்தர வேண் டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள் மற்  றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சார்  பாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவி யாளரிடம் வியாழனன்று மனு அளிக்கப்பட்டது. சங்கத்தின் மாவட்ட தலைவர் பி. வீரமணி,  மாவட்டச் செயலாளர் ஆ. பாலமுருகன், பொருளாளர் வி. மாரியப்பன், மாவட்ட இணைச்செயலாளர்- மாமன்ற உறுப்பினர் டி.  குமரவேல், மாவட்ட உதவி  தலைவர் ஏ. பாண்டி,  புற நகர் மாவட்ட தலைவர் கே. தவமணி, காதுகேளாதோர் அமைப்பின் மாநிலச் செய லாளர் எம். சொர்ணவேல் மற்றும் பலர் கலந்து கொண்டு மனு  அளித்தனர்.