districts

விருதுநகர் நகராட்சிக்கு தாமதமாக வரும் அதிகாரிகள் கைரேகை பதிவேடு இயந்திரம் அமைக்க பொது மக்கள் வலியுறுத்தல்

விருதுநகர், செப்.8- விருதுநகர் நகராட்சி யில் பணியாற்றும் முக்கிய  அதிகாரிகள் பலர் தாமதமா கவே பணிக்கு வருகின்ற னர். இதினால், தங்களது தேவைகளுக்காக அங்கு  வரும் பொது மக்கள் ஏமாற்  றத்துடன் திரும்பிச் செல் லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அங்கு கைரேகை  வருகைப் பதிவேடு இயந்தி ரத்தை பொருத்த வேண்டு மென பொது மக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.   விருதுநகர் நகராட்சி யில் துப்புரவு பிரிவு, பொறி யியல் பிரிவு, நகரமைப்பு பிரிவு, வருவாய் பிரிவு, அலு வலகப் பிரிவு ஆகியவை உள்ளன. இதில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பணி யாற்றி வருகின்றனர். இதில், முக்கிய பொறுப்பு களில் உள்ள அதிகாரிகள் பல நேரங்களில்,   திருநெல் வேலியின் உள்ள மண்டல இயக்குநர் அலுவலகம் மற்  றும் மாவட்ட ஆட்சியர் அலு வலகங்களில்  நடைபெறும்  கூட்டங்களுக்கு சென்று விடு கின்றனர். அப்போது,  அலு வலகங்களில் பணியாற்றும் ஒரு சில ஊழியர்கள் தவிர  பலர்   வெளியே சென்று விடுவ தாகவும்,  இதனால்,  நக ராட்சிக்கு பல்வேறு தேவை களுக்காக வரும் பொது மக்  கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்  செல்லும் நிலை ஏற்பட்டுள்ள தாக புகார் எழுந்துள்ளது.   நகராட்சி அலுவலகத் திற்கு அலுவலர்கள் 10  மணிக்குள் வர வேண்டு மென்பது விதிமுறையாகும். ஆனால், பலர் 11மணி வரை  பணிக்கு வருவதில்லை. அதன் பிறகு வந்து  கை யெழுத்து போடுகின்றனர் எனவும் பொது மக்கள் தெரி விக்கின்றனர். மேலும், உயர் பொறுப்பு களில் உள்ள அதிகாரிகள் பணி செய்யும் இடத்தில் இரு ந்து குறைவான தொலை விற்குள் வசிக்க வேண்டு மென்பதும் விதிமுறையா கும். அனால், பலர் வெளி மாவட்டங்களிலிருந்து நாள்  தோறும் வந்து செல்கின்ற னர். இதனால், திடீரென உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு வந்  தால் கூட அவர்கள் பணியில்  இருப்பதில்லை. இதனால் வேறு வழியின்றி ஆணை யாளரே அனைத்தையும் சமாளிக்கும் நிலை ஏற்பட் டுள்ளது.   இதனால், பொது மக்களுக்குத் தேவையான  அடிப்படையான பல பணி களும் மிகவும் பாதிப்படைந்து வருகிறது.   பல அரசு அலுவலகங்க ளிலும், சிறிய தனியார் நிறு வனங்களில் வட கைரேகை  வருகைப் பதிவேடு இயந்தி ரம் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தாமதமாக பணிக்கு வருவோர் மீது நட வடிக்கை எடுக்கப்படுகிறது.  இதனால், ஊழியர்கள் தாம தமின்றி பணிக்கு வருகின்ற னர்.   எனவே, மாவட்ட ஆட்சி யர், விருதுநகர்  நகராட்சி  அலுவலகத்தில் உடனடி யாக கைரேகை வருகைப்  பதிவேடு இயந்திரத்தை பொருத்திட நடவடிக்கை வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.