மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிவகங்கையில் சனிக்கிழமையன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் ஆர். கே.தண்டியப்பன் தலைமை வகித்தார். சிவகங்கை ஒன்றிய செயலாளர் ஜி.உலகநாதன் வரவேற்றுப் பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.