districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மயிலாடுதுறை, மே 3- மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடை யூரில் உள்ள லெகசி ஹோட்டலில் சிங்கப் பூர் ஜீவ காருண்யா நண்பர்கள் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், மற்றும் பொருளாதாரத்தால் பின்தங்கிய பெண்களுக்கு தையல் இயந்  திரம், பாய், போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்விற்கு திருக்கடையூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எழில் நம்பி தலைமை வகித்தார். செம்பனார்கோவில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், திமுக ஒன்றியச் செயலாளர் அமுர்த விஜய குமார், மாவட்ட கவுன்சிலர் துளசிரகா ரமேஷ், மாவட்ட துணைச் செயலாளர் ஞான வேலன், கேசவன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சிங்கப்பூர் ஜீவ காருண்யா மேனேஜர் குடந்தை கண்ணன் வர வேற்றார். பூம்புகார் சட்டமன்ற உறுப்பி னர் நிவேதா முருகன் 20-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர  சைக்கிள், தையல் இயந்திரம் வழங்கி னார்.