தேனி,டிச.24- தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் 37,654 தொழிலா ளர்களும், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியத்தில் 41,515 தொழிலாளர்களும் மற்றும் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர் நல வாரியத்தில் 3,900 தொழிலா ளர்களும் என மொத்தம் 83,072 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ள னர். மேலும், கடந்த மே-2021 முதல் தற்சமயம் வரை தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறையின் சார்பில் அமைப்பு சாரா தொழி லாளர்களுக்கு, சமூகப் பாதுகாப்பு மற்றும் நல வாரியங்கள் மூலம் கல்வி, மகப்பேறு நிதியுதவி, இயற்கை மரண உதவித்தொகை,
திருமண நிதியுதவி, கண் கண்ணாடிக்கான உதவித்தொகை, மாதாந்திர உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் மாவட்டத்தில், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 181 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.19,28,250 மதிப்பீட்டிலும், 413 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.49,26,250 மதிப்பீட்டிலும், 36 ஓட்டுநர்களுக்கு ரூ.3,78,300 மதிப்பீட்டிலும், என மொத்தம் 630 தொழிலாளர்களுக்கு ரூ.72,32,800 மதிப்பீட்டிலும், கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 761 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.77,07,500 மதிப்பீட்டிலும், 800 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.98,52,250 மதிப்பீட்டிலும், 40 ஓட்டுநர்களுக்கு ரூ.3,78,350 மதிப்பீட்டிலும், என மொத்தம் 1,601 தொழிலாளர்களுக்கு ரூ.1 கோடியே 79 லட்சத்து 38 ஆயிரத்து 100 மதிப்பீட்டிலும் வழங்கப் பட்டுள்ளது. மேலும், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 200 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.19,26,500- மதிப்பிலும், 111 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.24,63,100- மதிப்பீட்டிலும், 29 ஓட்டுநர்களுக்கு ரூ.3,00,000 மதிப்பீட்டிலும், என மொத்தம் 340 தொழிலாளர்களுக்கு ரூ.46,89,600 மதிப்பீட்டிலும், கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 380 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.38,53,500 மதிப்பீட்டிலும்,
550 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.49,26,000 மதிப்பீட்டிலும், 43 ஓட்டுநர்களுக்கு ரூ.4,56,300 மதிப்பீட்டிலும் என மொத்தம் 973 நபர்களுக்கு ரூ.92,35,800- மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 1,522 கட்டுமானத் தொ ழிலாளர்களுக்கு ரூ.1,54,15,750ஃ- மதிப்பிலும், 1,874 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2,21,67, 600ஃ- மதிப்பீட்டிலும், 148 ஓட்டு நர்களுக்கு ரூ.15,12,950 - மதிப் பீட்டிலும், என மொத்தம் 3,544 தொழிலாளர்களுக்கு ரூ.3 கோடியே 90 லட்சத்து 96 ஆயிரத்து 300- மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேனி-அல்லி நகரம் நகராட்சியை சேர்ந்த பழனி அவர்களின் மனைவி ஈஸ்வரி தெரிவிக்கையில், எனது கணவர் எதிர்பாராத விதமாக உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இதனால், அவருடைய இறப்பு எனக்கும், எனது குழந்தைகளுக்கும் மிகவும் பேரிழப்பை தந்தது. இந்நிலையில்,
எனது கணவர் சலவை தொழிலாளர் நல வாரி யத்தில் பதிவு செய்திருந்ததன் மூலம் எனது கணவரின் இறப்பிற் கான உதவித்தொகை ரூ.25 ஆயிரம் கிடைக்கப்பெற்றது. அதுமட்டு மின்றி ஆண்டுதோறும் எனது குழந்தைகள் படிப்பதற்கான கல்வி உதவித்தொகையும் கிடைக்க வழிவகை ஏற்பட்டு, எனது குழந்தை களின் எதிர்கால வாழ்விற்கு அடிப்படையாகவும், எங்களுக்கு பேருதவியாகவும் அமைந்துள்ளது.அரசின் நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகின்ற முதல மைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி யினை தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறினார். இத்தகவலை தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சண்முகசுந்தரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) மு.ராஜசெல்வன் ஆகியோர் தெரி வித்துள்ளனர்.