மாற்றுத்திறனாளிகளுக்கு தரமான உபகரணங்கள் வழங்கிடுக! மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தல்
ஒட்டன்சத்திரம், மார்ச் 19- மாற்றுத்திறனாளிகளுக்கு தரமான உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலா ளர் பகத்சிங் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகிறார்கள். இவர்களில் பலருக்கும் அவர்களுக்கான உபகரணங்கள் இல்லாமல் வெளியில் நடமாட முடியாது. இத்தகைய உப கரணங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவல கத்தின் மூலமாக இலவசமாக வழங்கி வருகிறார்கள். இத்தகைய உபகரணங்கள் வழங்குவதற்காக தமிழக அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி வருகிறது. இந்த நிதி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் உபகரணங்கள் தரமாக இருந்தால் மட்டுமே மாற்றுத்திறனாளிகளுக்கு பயனளிக்கும். ஆனால், இந்த ஆண்டு மாவட்ட மாற்றுத்திறனாளி கள் அலுவலகத்தின் மூலமாக வழங்கப்படுகிற உபகர ணங்கள் குறிப்பாக ஊன்றுகோல் தரமற்றவையாக இருப்பதால் மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வகையிலும் பயனில்லாமல் போகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக பழனியை சேர்ந்த அய்யனார் என்னும் மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்பட்ட ஊன்றுகோல் ஒரே வாரத்தில் உடைந்துவிட்டது. உடைந்த ஊன்றுகோலுடன் எந்த இடத்திற்கும் செல்ல முடியாமல் வேதனையில் உள்ளார். எனவே, மாவட்ட ஆட்சியரும், மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலரும் இவ்விசயத்தில் தலையிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தரமான உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
பிப்.21 கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
விருதுநகர், மார்ச் 19- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி. சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய கோட்டாட்சியர் அலுவலகங்க ளில் கோட்டாட்சியர் தலைமையில் பிப்,.21இல் விவசாயி கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே. விவ சாயிகள் அதில் கலந்து கொண்ட தங்களது கோரிக்கை களை மனுவாக தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கண்மாய்களில் இலவச மண் அள்ள விண்ணப்பிக்க சிறப்பு முகாம் தேனி ஆட்சியர் அழைப்பு
தேனி, மார்ச் 19- தேனி மாவட்டத்தில் நிலச் சீர்திருத்தப் பணிக்கு கண் மாய்களில் களிமண் ,வண்டல் மண் அள்ளுவதற்கு விண்ணப்பிக்க மார்ச் 21, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முôகம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா வெளி யிட்டுள்ள அறிவிப்பு: பொதுப் பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களில் நிலச் சீர்திருத்தப் பணிகளுக்கு விவசாயிகள் வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்க அரசு உத்தர விட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் பொதுப் பணித்துறை மஞ்ச ளாறு வடிநிலக் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 98 கண்மாய்கள், பெரியாறு-வைகை உப வடிநிலக் கோட்டத் தின் கட்டுப்பாட்டில் உள்ள 28 கண்மாய்கள், பேரூராட்சி களின் கட்டுப்பாட்டில் உள்ள 2 கண்மாய்கள், ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 31 கண்மாய்கள் என மொத்தம் 159 கண்மாய்களில் வண்டல் மண் அள்ளு வதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. கண்மாய்களில் வண்டல் மண் அள்ளுவதற்கு விவ சாயிகள் விண்ணப்பிக்க தேனி, பெரியகுளம், ஆண்டி பட்டி வட்டாட்சியர் அலுவலகங்களில் மார்ச் 21 ஆம் தேதி யும், போடி, உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகங்க ளில் மார்ச் 24 ஆம் தேதியும் சிறப்பு முகாம் நடைபெறு கிறது. விவசாயிகள் முகாமில் கலந்து கொண்டு தங்களது நிலத்தின் சிட்டா, அடங்கல், அ-பதிவேடு, கிராமம் மற்றும் புல வரைபடம் ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப் பிக்கலாம். முகாம் நடைபெறும் இடத்தில் விவசாயி களுக்கு தேவையான ஆவணங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட கனிம வளத் துறை உதவி இயக்குநர் அலுவல கத்திற்கு அனுப்பப்பட்டு, மாவட்ட ஆட்சியரால் அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லிகாய் மதுரை நகர் மாநாடு
மதுரை, மார்ச் 19- அகில இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழக முகவர் சங்க (லிகாய்) நகர் கிளை-4 இன் 11- ஆவது மாநாடு சனிக்கிழ மையன்று தலைவர் சி. ரங்கநாதன் தலைமையில் நடை பெற்றது. ஆர்.விஜி வரவேற்றார். ஜெ.கல்பனா அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.லெனின் துவக்கிவைத்து உரையாற்றி னார். லிகாய் தென்மண்டல செயல்தலைவர் எம்.செல்வ ராஜ், கோட்ட துணைச்செயலாளர் எஸ்.பிரபாகரன் சத்திய சீலன், வளர்ச்சி அதிகாரிகள் சங்க கோட்ட துணை தலை வர் எம்.அருண்குமார், வளர்ச்சி அதிகாரிகள் சங்க முன்னாள் மண்டல துணை தலைவர் டாக்டர் எஸ். மரிய வில்லியம், உதவி கிளை மேலாளர் மற்றும் நிர்வாக அதி காரி ராதிகா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். எல்ஐசி சிறப்பு வணிக சாதனை முகவர்களுக்கு லிகாய் சார்பில் நினைவு பரிசுகளை கிளை மேலாளர் பி. சி. மீனாட்சி சுந்தரம் வழங்கி, வாழ்த்தி பேசினார். மாநாட்டில் புதிய கிளை நிர்வாகிகள் தேர்வு செய் யப்பட்டனர். தலைவராக வி.ராமு, செயல் தலைவராக சி.ரங்கநாதன், செயலாளராக கே.ராதிகிருஷ்ணன், பொரு ளாளராக ஜெ.கல்பனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். வளர்ச்சி அதிகாரி ஆர். வாணி வித்யாஸ்ரீ முகவர் களுக்கு சிறப்பு வணிக பயிற்சி வகுப்பு நடத்தினார். கோட்டச் செயலாளர் கே.மாரி நிறைவுரையாற்றினார். வீரசின்னராஜ் நன்றி கூறினார்.
கொடைக்கானல் அருகே பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்து நான்கு பேர் காயம்
திண்டுக்கல், மார்ச் 19- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறை பகுதியில் நடைபெறும் கட்டுமான பணிக்கு பழனியில் இருந்து சரக்கு வாகனத்தில் ஜல்லி கற்கள் கொண்டுவரப்பட்டது. சனிக்கிழமையன்று இரவு பழனி பிரதான மலைச்சாலையில் மேல்பள்ளம் அருகே வளைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக ஓட்டுந ரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி 50 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த பேத்துப்பாறை பகுதியை சேர்ந்த ஓட்டுநர் உள்ளிட்ட 4 நபர்களில் ஒருவருக்கு பலத்த காயமும் மற்றவர்களுக்கு லேசான காயமும் ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் 50 அடி பள்ளத்தில் இறங்கி காய மடைந்தவர்களை மீட்டு பழனி மருத்துவமனைக்கு தனி யார் வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கொடைக்கானல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடைரோடு ரயில் நிலையத்தில் 13 கிலோ குட்காவுடன் ஒருவர் கைது
சின்னாளப்பட்டி, மார்ச் 19- திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலை யத்தில் மைசூரில் இருந்து தூத்துக்குடி வந்த விரைவு ரயிலில் சார்பு ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது. சந்தேகப்படும் வகையில் நெல்லை காரைக்குறிச்சியைச் சேர்ந்த பாக்கியராஜ் (42) என்பவர் வைத்திருந்த பேக்கை சோதனை செய்தனர்.அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா 58 பெரிய பாக்கெட்கள் சுமார் 13 கிலோ எடையுள்ள போதைப்பொருளை கைப்பற் றினர். பின்னர் அவரை கைது செய்து, நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிவகாசி : நள்ளிரவில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து
சிவகாசி, மார்ச் 19- சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் நள்ளிரவு நேரத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நாரணா புரம் புதூரில் ராஜராம் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீமகேஸ்வரி பட்டாசு ஆலை உள்ளது. இங்கு,சனிக்கிழ மையன்று வழக்கம் போல் பணி முடிந்து மாலை தொழிலா ளர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். இந்தநிலையில் திடீரென நள்ளிரவில் பயங்கர வெடி விபத்து அங்கு ஏற்பட்டது. இதனால், பல கிலோ மீட்டர் தொலைவிற்கு பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்தனர். தகவல றிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் பலமணி நேரம் போராடி தீயை அணைத்த னர். இந்த விபத்தில் ஆலையில் இருந்த அறை ஒன்று தரைமட்டமானது. இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சிவ காசி நகர் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசா ரணையில், பட்டாசு தயாரிக்கும் ரசாயன மூல பொருட் களை மிச்சம் வைத்து விட்டுச் சென்றதால் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது எனத் தெரியவந்தது.
வறட்சி நிவாரணத்தொகையை விவசாயிகளுக்கு பெற்றுத்தர நடவடிக்கை இராமநாதபுரம் ஆட்சியர் அறிவிப்பு
இராமநாதபுரம், மார்ச் 19- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் நெற்பயிர்கள் மற்றும் மக்காச் சோளப் பயிர்கள் பாதிப்பு அடைந்தன. இதனை வருவாய் துறையினர் மற்றும் வேளாண்துறை அலுவலர்கள் கூட்டாக கள ஆய்வு மேற்கொண்டு கணக்கெடுப்பு செய்தனர். கூட்டாய்வின் மூலம் கணக்கெடுப்பு செய்ததில் நெல்பயிர் -98,314 எக்டரும், மக்காச்சோளப்பயிரில் 40.58 எக்டரும் பாதிப்பு அடைந்துள்ளதாக அறிக்கை பெறப்பட்டு, அதற்குரிய இழப்பீட்டுத் தொகை ரூ.132.71கோடி பேரிடர் மேலாண்மை நிதி கோரி அரசுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதி களை கடந்த 03.03.2023 அன்று நில நிர்வாக ஆணையர், சென்னை அவர்களும் , 05.03.2023 அன்று வேளாண்;மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர், சென்னை அவர்களும், 10.03.2023 அன்று வருவாய் நிர்வாக ஆணை யர், சென்னை அவர்களும் ஆய்வு செய்துள்ளனர். வறட்சி நிவாரணத் தொகையினை விவசாயிகளுக்கு பெற்றுத் தர மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.