மதுரை, நவ.22- தமிழக அரசு மற்றும் போக்கு வரத்துக்கழக நிர்வாகம் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையில் அகவிலைப் படி உயர்வை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற, மரணமடைந்த ஊழி யர்களுக்கு ஒப்பந்தப்படி ஓய்வூதி யத்தை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது பணப்பயன்களை வழங்க வேண் டும். கொரோனா கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு அரசு போக்கு வரத்து தொழிலாளர் சங்கம், போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் நவம்பர் 22 அன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மதுரை புறவழிச்சாலையில் உள்ள தலைமையகம் முன்பு அரசு போக்குவரத்து மதுரை தொழி லாளர் சங்க தலைவர் பி. எம். அழகர்சாமி தலைமையில் முற் றுகை நடைபெற்றது. ஓய்வுபெற் றோர் நலச் சங்க மாவட்டத் தலை வர் ஏ.முருகேசன் முன்னிலை வகித் தார். மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் துவக்கி வைத்துப் பேசினார். சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ். கண் ணன் ஆதரித்துப் பேசினார், அரசு போக்குவரத்து மதுரை தொழிலா ளர் சங்க பொதுச் செயலாளர் ஏ. கனகசுந்தர், சம்மேளன உதவித் தலைவர் வி. பிச்சை, ஓய்வுபெற் றோர் நல அமைப்பு பொதுச் செய லாளர் ஆர் தேவராஜ் மற்றும் சிஐ டியு மாவட்டத் தலைவர் இரா. தெய்வராஜ், மாவட்டச் செயலா ளர் இரா. லெனின், மாவட்ட உத வித் தலைவர் ஜி. ராஜேந்திரன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
விருதுநகர்
விருதுநகர் பணிமனை முன்பு சிஐடியு-அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் முற் றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டலத் தலைவர் ஏ.சுந்தர் ராஜ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் எம்.வெள்ளத்துரை கண்டன உரையாற்றினார். கோரிக் கைகளை விளக்கி மண்டல துணைத் தலைவர் ஜி.வேலுச்சாமி, மாவட்ட பொருளாளர் எம்.கார் மேகம், ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகிகள் தங்கப் பழம், போஸ், முத்துச்சாமி ஆகி யோர் பேசினர். பேச்சுவார்த்தை யின் முடிவில் அரசு தரப்பில் 2வார கால அவகாசம் கேட்டதால், போராட் டம் ஒத்தி வைக்கப்பட்டது.
திண்டுக்கல்
திண்டுக்கல் அரசு போக்கு வரத்து தலைமை அலுவலகத்தை சிஐடியு அரசு போக்குவரத்து தொழி லாளர்கள் முற்றுகையிட்டனர். திண்டுக்கல் மண்டல தலைவர் ஐ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் என்.ராமநாதன், துணைப் பொதுச்செயலாளர் ஜி.வெங்கிடு சாமி, பொருளாளர் எஸ்.ஜோசப் அருளானந்து, துணைத்தலைவர் எம்.மாணிக்கம், மற்றும் மத்திய சங்க நிர்வாகிகள், ஓய்வு பெற்ற சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சென்னையில் சிஐடியு சம் மேளன நிர்வாகிகளுடன் அதிகாரி கள் நடத்திய பேச்சுவார்த்தையில் பல்வேறு கோரிக்கைகள் ஏற் றுக்கொள்ளப்பட்டன. பணியின் போது மரணமடைந்த தொழிலா ளர்களுக்கும், விருப்ப பணி ஓய் வில் சென்றவர்களுக்கும், 287 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவ தாகவும், நிலுவைத் தொகை களை பொங்கலுக்குள் வழங்கு வதாகவும், போக்குவரத்துத்துறை செயலாளரும், முதன்மை செய லாளரும் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.