சொத்து வரியை உயர்த்தாமல் பழைய முறையிலேயே வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவில்லிபுத்தூர் நகர்க்குழு சார்பில் கோரிக்கை மனு நகராட்சித் தலைவர் தங்கம் ரவிக் கண்ணனிடம் வழங்கப்பட்டது. இதற்கு மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் தலைமை வகித்தார். உடன் நகரச் செயலாளர் ஜெயக்குமார் முனியப்பன் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.