districts

img

பேராசிரியர்கள் தர்ணா போராட்டம்

திருநெல்வேலி, மே 8- கல்லூரி பேராசிரியர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக வழங்  கப்பட்டு வரும் பணி மேம்பாட்  டினை அமல்படுத்த வேண்டும்,  அரசாணை எண்.5-ன் படி முனை வர் பட்டம் பெற்ற ஆசிரியர் களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் அரசாணைகளை அமல்படுத்த மறுக்கும் பாளை யங்கோட்டை சவேரியர் கல்லூரி நிர்வாகத்தின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மூட்டா சங்கம் சார்பில் நெல்லை வண்ணார்பேட்  டையில் ஞாயிற்றுக்கிழமை தர்ணா போராட்டம் நடைபெற்றது. தர்ணா போராட்டத்திற்கு மூட்டா சங்க நெல்லை மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.துணை  பொதுச்செயலாளர் கலைவா ணன் தொடக்க உரையாற்றினார், பொதுச்செயலாளர் நாக ராஜன், மூட்டா நிர்வாகிகள் நசீர்  அகமது, ராஜஜெயசேகர் ஆகி யோர் பேசினர் .மூட்டா மூன்றாம் மண்டல செயலாளர் சிவஞானம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.