districts

img

தரக்குறைவாக பேசிய புகாரில் பேராசிரியர் கைது

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் சாதியை குறிப்பிட்டு மாணவிகளை ஒருமையிலும், தரக்குறைவாக பேசிய புகாரில் வரலாற்று பேராசிரியர் சண்முகராஜா என்பவர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 
மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரணாஇ மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 நேற்று காமரஜர்  பல்கலைகழத்தின் மாடியில் இருந்து ஒரு மாணவி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.