சிவகங்கை, ஜூலை 27- விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் திட்டத் தின் கீழ், சிவகங்கை மாவட் டம், திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் நாகப்பா மருதப்பா மேல்நிலைப்பள்ளிக்களைச் சேர்ந்த மாணவ, மாணவி யர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, மாவட்ட ஆட் சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வழங்கி, தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, திருப்பத்தூர் பேரூ ராட்சி தலைவர் என்.கோகிலா ராணி நாராயணன், பேரூ ராட்சி துணைத்தலைவர் கான்முகமது, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.சண்முகவடி வேலு, சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலு வலர் ரா.சுவாமிநாதன், பள்ளி தலைமையாசிரியர் ச. முருகேசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.