நாகர்கோவில், செப். 24 கன்னியாகுமரி மாவட்டத்தில் மண் பானைகள் செய்வதற்கு தேவையான மண் எடுக்க அனுமதி வழங்காமல் இரண்டு ஆண்டு களாக அதிகாரிகள் அலைக்கழித்து வருவ தால்மண் பாண்ட தொழிலாளர்கள் வேதனை யடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு தேவையான மண்பானைகளை இப்போதே தயார் செய்ய ஆரம்பித்தால் தான் பண்டிகைக்கு தேவை யான மண்பானைகள் வழங்க முடியும் எனவே மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கக் கோரி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மண்பாண்ட தொழிலா ளர்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.