districts

img

குப்பைக்கிடங்கில் தனியார் மருத்துவக் கழிவுகளை கொட்டும் வில்லுக்குறி பேரூராட்சி நிர்வாகம்

நாகர்கோவில். மார்ச் 7- குமரி மாவட்டம், வில்லுக்குறி பேரூராட்சிக்குட் பட்ட மாம்பழத்துறையாறு நீர்த்தேக்கம் செல்லும் வழியில் நீர்வளத்துறைக்குச் சொந்தமான இடத்தில்  வில்லுக்குறி பேரூராட்சியின் குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு சமீபகாலமாக சுங்கான்கடை பகுதி யில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனை யின் மருத்துவக் கழிவுகளை பேரூராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான வாகனத்தில் ஏற்றி வந்து கொட்டுகிறார்கள்.  இந்த குப்பைகளை சில சமயங்களில் தெரு நாய்கள் இழுத்து பக்கத்தில் ஓடுகின்ற ஆலங்கால் என்கிற வாய்க்காலில் போடுகின்றன. இந்த தண்ணீரை அப்பகுதி விவசாயிகள் குடிப்பதற்கும் குளிப்பதற்காகவும் பயன்படுத்துகின்றனர். இதனால் பல்வேறு நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது. குறிப்பாக பாம்பர்ஸ், ஊசி மருந்து குப்பிகள், பாலித்தீன் மற்றும் பல மருத்து வக்கழிவுகள் போன்றவற்றை ஒன்றாக போட்டு எரியூட்டுகிறார்கள். மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரித்து மக்காத குப்பையை மறுசுழற்சி செய்யாமல் எரியூட்டுகிறார்கள்.  கட்டாயமாக பாலித்தீன் மறுசுழற்சி செய்ய வேண்டும் என்று அரசே சொல்லும்போது நிர்வாகம் ஏன் எரியூட்டுகிறது?. பாலித்தீன் பயன்பாட்டை நிறுத்தி பாலித்தீன் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் முயற்சிக்கும் போது  பேரூராட்சி நிர்வாகம் தன்னுடைய சொந்த வாக னத்தில் பாலித்தீன் பைகளில் மருத்துவ கழிவுகளை ஏற்றி வரும்போது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.  அதேபோல் நீர்வளத்துறைக்கு சொந்தமான இன்னொரு இடத்தில் எல்லா குப்பைகளையும் சேர்த்து மலைபோல் குவித்து வைத்திருக்கிறார்கள். இந்த குப்பைகள் பக்கத்தில் இருக்கக்கூடிய புதுக்குளத்தில் கலந்து அந்த நீர் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கிறது. ஒரு காலத்தில் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் பயன்படுத்திய குளம் இன்று சாக்கடை போல் காட்சியளிக்கும் நிலையில் உள்ளது. அதேபோல் இந்த குப்பைகள் குவித்து வைத்திருக்கும் இடத்தை ஒட்டி ஒரு கால்வாய் உள்ளது. பேச்சிப்பாறை அணையிலிருந்தும் மாம்பழத்துறையாறு அணை யிலிருந்தும் வரக்கூடிய தண்ணீர் இந்த ஆலங்கால் வழியாக வந்து சுமார் 500 ஏக்கருக்கு மேல் உள்ள வயல்கள் மற்றும் வாழைத்தோட்டங்கள் பல்வேறு குளங்களில் தேக்கி விவசாயத்துக்கும் குளிப்பதற்கும் பயன்படக்கூடியது. இந்த தண்ணீர் பேரூராட்சி நிர்வா கத்தின் சீர்கேட்டால் பாழடைகிறது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டால், அந்த தனியர் மருத்துவமனை வரி கட்டுகிறது அத னால் மருத்துவக் கழிவுகளை கொண்டு வருகிறோம் என்று பதில் வருகிறது. மருத்துவ கழிவுகளை மறு சுழற்சி செய்வதற்காக அரசு சார்பில் வள்ளியூர் பகுதி யில் மறுசுழற்சி செய்வதற்காக ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. ஆனால் இந்த மக்காத குப்பைகளை ஏன் இங்கு எரியூட்டுகிறார்கள். இதை  இப்போதே தடுத்து  நிறுத்தாவிடில்  நாமும் நமது சந்ததிகளும் நோயாளிக ளாக மிகவும் மோசமான  நிலைக்கு தள்ளப்படுவோம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.