பிப்.27- திருவிலில்லிபுத்தூர் நக ராட்சி பகுதியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஞாயிறன்று நடைபெற்றது. நகராட்சி சார்பில் 23 இடங்க ளில் முகாம்கள் அமைக்கப் பட்டு 5 வயதிற்குட்பட்ட குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. முன்னதாக பேருந்து நிலையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு நகராட்சி ஆணையாளர் மல்லிகா தலைமை தாங்கி னார். நகராட்சி நகர் நல மருத்துவர் கவிப்பிரியா, பிரண்ஸ் ரோட்டரி கிளப் தலைவர் பால்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் காளிராஜ் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கிவைத்தார்.