districts

img

வெம்பக்கோட்டை அருகே 2ஆம் கட்ட அகழாய்வு பணி

வெம்பக்கோட்டை, மார்ச் 25- விருதுநகர் மாவட்டம்,  வெம்பக்கோட்டை அருகே  விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குட்பட்டது  வடகரை. இங்குள்ள  உச்சிமேட்டில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில்  முதல் கட்ட தொல்லியல் அகழ்வாராய்ச்சிப் பணிகள்  நடை பெற்றது.  இந்த அகழாய்வில்  சுடுமண்ணாலான  பகடைக்  காய், தக்களி,  ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு  வளையல்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் கிடைத்தன. மேலும், சுடு மண்ணால் ஆன திமிலுடன் கூடிய  காளை உருவம் மற்றும் பெண் உருவ பொம்மை, ஆண் உருவ பொம்மை  ஆகியவையும் கண்டறியப்பட்டது. மேலும், தங்க ஆபரணமும் கிடைத்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் முதற்கட்ட அக ழாய்வு பணிகள் நிறைவடைந்தன.   இந்நிலையில், வெம்பக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.  அதற்கான நிலம் தேர்வு செய்யப்பட்டு அதனை  சுத்தம் செய்யும் பணிகள் கடந்த மாதம் துவங்கியது. இப்பணிகள் நிறைவடைந்து, தோண்டப்படும் இடங்களை  அளவீடு செய்யும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. எனவே, ஒரு சில நாட்களில் அகழ்வாராய்ச்சிப் பணி கள் துவங்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.