districts

மதுரை மண்டலம் 4-இல்  நாளை மக்கள் குறைதீர் முகாம்

மதுரை, பிப்.26- மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்  கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வ தற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை யன்றும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட ஐந்து மண்ட லங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.   பிப்ரவரி 28 செவ்வாய்க்கிழமையன்று சி.எம்.ஆர். ரோட்டில் உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை  பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர், ஆணையா ளர் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது. (மண்ட லம் 4 (தெற்கு) உட்பட்ட வார்டு பகுதிகள்: வார்டு எண்.29,  செல்லூர், வார்டு எண்.30 ஆழ்வார்புரம், வார்டு எண்.41  ஐராவதநல்லூர், வார்டு எண்.42 காமராஜர் சாலை, வார்டு  எண்.43 பங்கஜம் காலனி, வார்டு எண்.44 சேர்மன் முத்து ராமய்யர் ரோடு, வார்டு எண்.45 காமராஜபுரம், வார்டு எண் 46 பழைய குயவர்பாளையம், வார்டு எண்.47 சின்னக்  கடை தெரு, வார்டு எண்.48 லெட்சுமிபுரம், வார்டு எண்.49  காயிதே மில்லத் நகர், வார்டு எண்.53 செட்டியூரணி, வார்டு எண்.85 கீழவெளிவீதி, வார்டு எண்.86 கீரைத்துறை, வார்டு எண்.87 வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு,  வார்டு எண்.88 அனுப்பானடி, வார்டு எண்.89 சிந்தா மணி, வார்டு எண்.90 கதிர்வேல் நகர் ஆகிய வார்டுகள்) இந்த குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி, பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறுமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.