districts

img

முறையான அறிவிப்பின்றி நடத்தப்படும் முகாம்

திண்டுக்கல், நவ.30- முறையான அறி விப்பின்றி மாற்றுத்திறனாளி கள் முகாம் நடத்தும் திண் டுக்கல் கோட்டாட்சியரைக் கண்டித்து திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் அலுவ லகத்தில் புதனன்று தமிழ் நாடு அனைத்து வகை மாற்  றுத்திறனாளிகள் மற்றும்  பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் சார்பாக மறியல் போராட்டம் நடை பெற்றது.  மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெற்றால் மருத்துவர்கள் மற்றும் மாற் றுத்திறனாளி அலுவலக அதிகாரிகள் கலந்து கொள்ள  வேண்டும். அம்முகாமில் கலந்து கொள்பவர்களின் மனுக்கள் மீது உரிய விசா ரணை நடத்தி அடையாள அட்டைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். ஆனால் திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத் தில் புதனன்று கோட்டாட்சி யர் பிரேம்குமார் தலைமை யில் நடைபெற்ற முகாம்  குறித்து பொதுமக்கள்  மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கு முறையாக அறி விப்பு இல்லை. பத்திரிகை களில் விளம்பரங்கள் வெளி யிடப்படவில்லை. ஏற்க னவே 3 முறை இது போன்று நடத்தப்பட்ட முகாம்களில் பங்கெடுத்தவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படவில்லை என்ற  புகார் உள்ளது. இந்நிலை யில் மாற்றுத்திறனாளி அலு வலர் இல்லாமல் முகாம் கள் நடத்தக்கூடாது என்று ஏற்கனவே இதே கோட் டாட்சியர் மற்றும் ஆட்சியர், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட கூட்டத் தில் எடுக்கப்பட்ட முடிவு களுக்கு மாறாக இந்த கூட்  டம் நடைபெறுகிறது என்றும், கோட்டாட்சியரின் இத்த கைய தன்னிச்சையான போக்குக்கு எதிர்ப்பு தெரி வித்தும் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.  இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். சாணார்பட்டி ஒன்றியச்செயலாளர் கருப்பு  சாமி, திண்டுக்கல் ஒன்றி யத்தலைவர் வேளாங் கண்ணி ஆகியோர் கலந்து கொண்டனர்.