districts

img

சாலையை சீரமைக்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

பழனி, மே 25- பழனி தாலுகா அமர பூண்டி- வத்தக்கவுண்டன் வலசு சாலையை சீர மைக்கக்கோரி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்  திறனானிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக் கான சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவில் அமர பூண்டி கிராமம் முதல் வத்தக்  கவுண்டன்வலசு கிராமம் வரையுள்ள சாலையையும், வத்தக்கவுண்டன்வலசு கிராமம் முதல் கரட்டுப்பிரிவு  வரையுள்ள சாலையையும் இரண்டு புறமும் புதுப்பிக்கி றோம் என்று பழைய சாலை யை முழுவதுமாக தோண்டி போட்டுள்ளனர். இதனால் விபத்துகள் நிகழ்ந்து மக் கள் காயமடைகின்றனர். ஏற்  பட்டு இச்சாலையை பயன் படுத்தும்.  எனவே, உடனடியாக  சாலையை சீரமைக்க வலி யுறுத்தி மாற்றுத்திறனாளி கள் சங்கத்தின் வத்தக கவுண்டன்வலசு கிளை தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் மே 24 அன்று அமரபூண்டியில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பகத்சிங், பழனி ஒன்றிய தலைவர் மணிகண்டன், செயலாளர் கண்ணுச்சாமி ஆகியோர் பேசினர்.