மதுரை செல்லூர் 60 அடி சாலை, அகிம்சாபுரம் மேலத்தெரு சந்திப்பில் சாலையில் பள்ளம் தோண்டி ஒரு மாதமாக மூடாமல் இருப்பதை கண்டித்தும் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதைக் கண்டித்தும் செல்லூர் 60அடி சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல், ஆ.மாயத்தேவன் வடக்கு 2-ஆம் பகுதிக்குழுச் செயலாளர் ஏ.பாலு, மாவட்டக்குழு உறுப்பினர் கே.அலாவுதீன், அகிம்சாபுரம் கிளைச் செயலாளர் என்.ராஜா தலைமையில் மக்கள் தன்னெழுச்சியாகச் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.