districts

கோவில்பாப்பாகுடி மக்கள் பட்டா வழங்க வலியுறுத்தல்

மதுரை, ஜூன் 19- மதுரை கோவில்பாப்பாகுடி ஊராட்சி மந்தையம்மன் கோவில் தெருப் பகுதியில்  கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குடி யிருக்கும் மக்கள் பட்டா கோரி மதுரை வட்டாட்சியரிடம் மாதர் சங்க மதுரை மேற்கு ஒன்றியத் தலைவர் அமிர்தவள்ளி, செயலாளர் சரஸ்வதி ஆகியோர் தலை மையில் திங்களன்று மனு அளித்தனர். மனுவில், “நாங்கள் சுமார் 40 ஆண்டு கால மாக கோவில்பாப்பாகுடி ஊராட்சி மந்தை யம்மன் கோவில் தெரு பகுதியில் வசித்து வருகிறோம். 2001-ஆம் ஆண்டு ஆட்சியர் “அனுபந்தம் பட்டா” வழங்கியுள்ளார். அத னடிப்படையில் வீட்டு வரி, தண்ணீர் வரி  மற்றும் மின் கட்டணம் செலுத்தி வரு கிறோம். எங்களுக்கு பட்டா இன்னும் வழங்கவில்லை. பட்டா வழங்கவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.