விருதுநகர், நவ.11- இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை வழங்கக் கோரி விருதுநகர் மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நவம்பர் 11 வெள்ளியன்று “மனுக்களோடு மக்கள் இயக்கம்” நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள குடியிருக்க சொந்தமாக வீடு இல்லாத ஏழை, எளிய மக்களைத் திரட்டி இலவச வீட்டு மனைப் பட்டா கோரி கடந்த 2022 மே 6 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாபெரும் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்தின் முடிவில் ஆயிரக்க ணக்கான மனுக்கள் ஆட்சியர் அலுவலகத் தில் வழங்கப்பட்டன . கொடுக்கப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவ லகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஏழை, எளிய மக்களுக்கு தற்போது வரை இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்படவில்லை. எனவே, உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, விருது நகர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பும் வெள்ளியன்று “மனுக்களோடு மக்கள் இயக்கம்“ நடை பெற்றது.
விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு நகரச் செயலாளர் எல்.முருகன் தலைமை தாங்கி னார். வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்து வேலு, தெற்கு ஒன்றிய செயலாளர் பி.நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கி வைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.வேலுச்சாமி பேசினார். முடிவில், மூத்த தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார். மேலும் இதில், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.பாலசுப்பிரமணி யன், எம்.ஜெயபாரத், என்.உமாமேஸ்வரி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். சிவகாசியில் நகரச் செயலாளர் ஆர். சுரேஷ்குமார், ஒன்றிய செயலாளர் பி.பால சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.முருகன் துவக்கி வைத்தார். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.என்.தேவா கண்டன உரையாற்றினார். காரியாபட்டியில் பி.மலைச்சாமி தலை மையில் வட்டச் செயலாளர் ஏ.அம்மாசி முன்னிலையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.லட்சுமி துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்துக்குமார் கண்டன உரையாற்றினார். திருச்சுழியில் ஒன்றியச் செயலாளர் மார்கண்டன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.முருகன் கண்டன உரையாற்றினார். ஒன்றியகுழு உறுப்பினர் கள் செல்வராஜ், குமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
சாத்தூரில் நகர் செயலாளர் பெத்தராஜ் தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர் கள் கே.விஜயகுமார், எஸ்.தெய்வானை ஆகி யோர் முன்னிலையில் ஒன்றிய செயலாளர் எஸ்.சரோஜா துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.விஜயமுருகன் கண்டன உரையாற்றினார். வெம்பக்கோட்டையில் கண்ணன் தலை மையில் ஒன்றிய செயலாளர் முனியசாமி துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.குருசாமி கண்டன உரை யாற்றினார். அருப்புக்கோட்டையில் நகர் செயலா ளர் எஸ்.காத்தமுத்து தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர் பி.அன்புச்செல் வன் துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.தாமஸ் கண்டன உரை யாற்றினார். ஒன்றிய செயலாளர் எம்.கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர். திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நகர்க்குழு உறுப்பினர் வீர சதானந்தம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கே. அர்ஜுனன் துவக்கி வைத்துப் பேசினார் . ஒன்றிய செயலாளர் சசிகுமார், சந்தனம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.
வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவல கம் முன்பு ஒன்றிய செயலாளர் பெனரி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். சுந்தரபாண்டியன் ,மாவட் டக்குழு உறுப்பினர்கள் ஜோதிலட்சுமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் பேசினர் . ஒன்றியக்குழு உறுப்பினர் ஜீவானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நகரச் செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் ராமர், கிழக்கு ஒன்றிய செயலா ளர் முனியாண்டி, மேற்கு ஒன்றிய செயலாளர் சந்தனகுமார் ஆகியோர் பேசினர். மாநில குழு உறுப்பினர் மகாலட்சுமி சிறப்புரை யாற்றினார். நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.