இராமநாதபுரம், பிப்.1- இராமநாதபுரம் மாவட்டம், கமுதி கே.என். மெட்ரிகு லேசன் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர்களை சிறப்பிக் கும் வகையில் பெற்றோர்கள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் செயலாளர் ஆர்.முத்து விஜ யன் தலைமை வகித்தார். மதுரை ஜெகன் பிரகாஷ், கல்வி ஆலோசகர் .பி.காமராஜ்,பள்ளியின் தலைவர் ஆர்..வெங்கடேஷ் பாபு மற்றும் முதல்வர் டாக்டர் எம்.ஸ்ரீதேவி ஆகியோர் பேசினர். போட்டிகளில் வென்ற பெற்றோர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அவ்விழாவில் பசுமை இராமநாதபுரம் திட்டத்திற்காக 10 ஆயிரம் விதைகள் மற்றும் 5 ஆயிரம் விதைப்பை களை பள்ளிக்கு நன்கொடையாக வழங்கிய க.கணே சனுக்கு பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட பூப்பந்து மற்றும் மாவட்ட எறிபந்து ஆகிய போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட அணி மாணவ, மாணவியர்களுக்கும், உடற்கல்வி ஆசிரியர் எ.லட்சுமணன் பரிசு வழங்கினார். பள்ளியின் விசைப் பலகை ஆசிரியர் .சதீஷ் மற்றும் கராத்தே ஆசிரியை அம்பிகாபதி ஆகியோருக்கும் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. மாணவிகளின் கிராமிய நடனம் நடைபெற்றது வி.கீர்த்திகா நன்றி கூறினார்.