பழனியில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பழனி, ஆக.19- பழனியில் கடந்த 20 ஆண்டுகளாக சட்டப் போராடடம் நடத்தி வரும் விஜயகுமார் மில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாலை தொழிலாளர்களின் சம்பளத்தில் பாதி குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் தர வேண்டும், கடந்த 20 ஆண்டுகளாக வியீஜயகுமார் மில் தொடர் பான வழக்கை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இம்மில்லில் பணியாற்றும் தொழிலா ளர்களுக்கு உரிய பணப்பலன்கள், வழங்க வேண்டும் என்பன. உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்ட பஞ்சாலைத் தொழிலாளர் சங்க மாவட்டத்தலைவர் ஆர்.ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் எம்.அசோகன், மாநில நிர்வாகிகள் சக்திவேல், மாணிக்கவாசகம், மாவட்டச்செயலாளர் கே. பிரபாகரன், .பழனி பகுதி சிஐடியு தலைவர்கள் பேரா. மோகனா, எஸ்.பி.மனோகரன், நாச்சிமுத்து, சிபிஎம் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் எஸ்.கமலக்கண்ணன், பஞ்சாலை சங்க நிர்வாகிகள் முனியப்பன், செல்வராஜ் ஆகியோர் கொண்டு பேசினர். (நநி)
சிவகாசி அருகே சொத்து தகராறில் தம்பி கொலை : அண்ணன் கைது
சிவகாசி, ஆக.19- சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தை சேர்ந்த வர் மாரிமுத்து. இவருக்கு முத்தீஸ்வரன் (52), முருகன் (32), மணிகண்டன் (29), விநாயகமூர்த்தி (22) என்ற மகன்க ளும், ராஜேஸ்வரி (24), முருகேஸ்வரி (48) என்ற மகள்க ளும் உள்ளனர். இவர்களுக்கிடையே பல வருடங்களாக குடும்ப சொத்துக்களை பிரிப்பதில் பிரச்சனை உள்ளது. இது குறித்து பேசி முடிவு எடுக்க முத்தீஸ்வரன் அனைவரை யும் தனது வீட்டிற்கு அழைத்தாராம். அதன் பேரில் அனை வரும் ஒன்றுகூடி பேசியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியது. இதில் முருகனின் கழுத்து அறுக்கப்பட்டது. படுகா யம் அடைந்த அவரை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் முருகன் மனைவி இந்திராதேவி, அவரது தாயார் பெரியதாய், மணிகண்டன் ஆகியோர் படுகாயமடைந்த னர். அவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்கு சம்பந்தமாக முத்தீஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.
வீடு புகுந்து நகை பணம் திருட்டு
சிவகாசி, ஆக.19- சிவகாசி அருகே லட்சுமியாபுரத்தில் வீட்டின் உள்ளே புகுந்து நகை பணம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சிவகாசி அருகே உள்ள ஏ.லட்சுமியாபுரம் பகுதி யைச் சேர்ந்தவர் முத்து (35). இவர் வீட்டைப் பூட்டி விட்டு வேலைக்குச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு திறக்கப்பட்டிருந்தது. இதனால் உள்ளே சென்று பார்த்துள்ளார். மேலும், பீரோ உடைக் கப்பட்டு அதில் இருந்து தங்க கம்மல்கள், வெள்ளிக் கொலுசு மற்றும் 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது. எனவே, முத்து, இதுகுறித்து மாரனேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பெயிண்டர் கொலை : தந்தை-மகன்கள் கைது
விருதுநகர், ஆக.19- விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே பெயிண்டர் கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியை சேர்ந்த வர் பாலமுருகன்(37). பெயிண்டர் வேலை செய்து வந்தார். இந்நிலையில், இராஜபாளையம் அருகே காளவாசல் பகுதியில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அவர் வழிநெடுக பூக்களை தூவிச் சென்றார். அப்போது அவருக்கும், சிவகாசி பாலையாபுரத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து, முத்துகிருஷ்ணன் அவரது தந்தை சுந்தர்ராஜன், தம்பி முத்துசெல்வம் ஆகிய 3 பேரும் சேர்ந்து பாலமுருகனை உருட்டுக்கட்டையால் தாக்கி யுள்ளளனர். இல் அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக பாலமுருகனின் மனைவி முத்துலட்சுமி கீழராஜகுலராமன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தர்ராஜன், அவரது மகன்கள் முத்துகிருஷ்ணன், முத்துசெல்வம் ஆகியோ ரைக் கைது செய்தனர்.
சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்தவருக்கு 20 ஆண்டு சிறை
திருவில்லிபுத்தூர்,ஆக.19- 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருவில்லிபுத்தூர் அருகே அத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர் சிவக்குமார் (42) இவர் கடந்த 24.11.2020 அன்று அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி க்கு பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.இது தொ டர்பாக வந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து இளைஞர் சிவகுமாரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பான வழக்கு திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கிய நீதிபதி பூர்ணஜெயஆனந்த், பாலியல் துன்புறுத்தல் செய்த சிவகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
பழனி: 2 பெண்களிடம் நகை பறிப்பு
பழனி, ஆக.19- பழனி திருநகரை சேர்ந்தவர் மாரி. இவரது மனைவி ஆவுடையம்மாள் (வயது 77 ). இவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை .இவர் சம்பவத்தன்று குப்பைகளை குப்பை தொட்டில் கொட்டுவதற்காக நடந்து சென்றார். அப்பொழுது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் ஆவுடையம்மாளின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். திருடன் திருடன் என்று கத்தினார். ஆனாலும் அவரின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர் அதேபோல் பழனி கவுண்டன் குளத்தைச் சேர்ந்தவர் மனோகரன் மனைவி மஞ்சுளா (வயது 70 ). இவரும் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் மஞ்சுளாவின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து பழனி நகர காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
பழனியில் தெருநாய்கள் தொல்லையால் மக்கள் அச்சம்
பழனி,ஆக.19- பழனியில் அனைத்துப் பகுதியிலும் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இவைகள் மக்களை துரத்தி, துரத்தி கடிக்கின்றன. இதனால் பலர் காயம டைந்தனர். நாய்கள் விரட்டுவதால் இருசக்கர வாகனங்களில் இருந்து கீழே விழும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தெருநாய்களின் பெருக்கத்தை தடுக்க வேண்டும் என அனைத்து பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் நகராட்சி மூலம் செயல்பட்டு வந்த நாய் கருத்தடை மையம் செயல்படாமல் உள்ளது பழனி அரசு மருத்துவமனையில் நாய்க்கடிக்காக ஊசி போடுவதற்கு அதிக அளவில் மக்களை காண முடிகிறது எனவே நகர மன்ற தலைவர் ,நகராட்சி ஆணை யர் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் ஆகியோர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.