districts

நிர்வாக இயக்குநரை சிறையிலடைக்க உத்தரவு

மதுரை, செப்.18- நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக  இயக்குனர் கமலக்கண்ணன் மற்றும் அவ ரது சகோதரர் ஆகியோர் சிறையிலடைக் கப்பட்டனர்.  மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வந்த நியோமேக்ஸ் நிதி நிறு வனம், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்  தால் பணத்தை இரட்டிப்பாகத் தருவதாக வும், மாதாமாதம் 12 சதவீதம் முதல் 30 சத வீதம் வரை வட்டி வழங்குவதாகவும் தெரி வித்தனர். இதை நம்பி தமிழகம் முழுவதும் ஏரா ளமானோர் முதலீடு செய்தனர். ஆனால் முத லீட்டாளர்களுக்குப் பணத்தைத் திரும்ப வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முத லீடு செய்த நபர்கள், மதுரை பொருளா தாரக் குற்றப்பிரிவில் புகாரளித்தனர்.  அதன்பேரில் நியோமேக்ஸ் நிதி நிறு வனத்தின் நிர்வாக இயக்குநர்கள் வீர சக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணி யன் உள்பட 19 பேர் மீது பொருளாதா ரக் குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்த னர். ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலை யில், நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்ததால் பொருளாதாரக்குற்றப்பிரிவு காவல்துறையினர் அவர்களைத் தேடி வந்தனர்.  இந்நிலையில் நியோ மேக்ஸ் நிறு வனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒரு வரான கமலக்கண்ணன் சென்னையில் இருப்பதாக பொருளாதாரக் குற்றப்பிரிவு தனிப்படை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சென்னை சென்ற  தனிப்படை காவல்துறை அங்கு தங்கி யிருந்த கமலக்கண்ணனையும் மற்றொரு  நிர்வாக இயக்குநரான சிங்காரவேலனை யும் ஞாயிறன்று கைது செய்தனர். இவர்கள் திங்களன்று மதுரைக்கு அழைத்துவரப்பட்டு அரசு ராஜாஜி மருத்து வமனையில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திய காவல்துறையினர் பின்னர் அவர்களை நீதிபதி தமிழரசி முன்பாக ஆஜர்படுத்தினர். இருவரையும் செப்டம்பர் 29ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதனை யடுத்து இருவரும் மதுரை மத்திய சிறையில டைக்கப்பட்டனர்.