districts

img

பேருந்து நிலையத்தை இடம் மாற்ற எதிர்ப்பு

தேனி ,நவ.3 பேருந்துநிலையத்தை  இடமாற்றம் செய்வதற்கு  எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் பெரியகுளம் நகராட்சி யை முற்றுகையிட்டனர்.  இதனால் நகர் மன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பெரியகுளம் நகர்மன்றக் கூட்டம் தலைவர் சுமிதா தலைமையில் நடை பெற்றது. ஆணையாளர் கணேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பெரியகுளம் வடகரை பகுதியில் இயங்கி வரும் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்வதற்கான தீர்மானம் இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து தக வலறிந்த மக்கள் திரண்டு வந்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். தொடர்ந்து நகர்மன்ற கூட்ட அரங்கில் நுழைந்து எதிர்ப்புக் கோஷமிட்டனர். தலைவர் சுமிதா இருக்கையை முற்றுகையிட்ட அவர் கள் பேருந்துநிலைய இடமாற்றத் தீர்மா னத்தை ரத்துச் செய்ய வேண்டும். தற் போதைய பேருந்துநிலையத்துக்குள் அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து கூட்டத்தை தலைவர்  ஒத்திவைத்தார். இதுகுறித்து தலைவர் சுமிதா கூறு கையில், பேருந்துநிலைய மாற்றம் தொடர்பான தீர்மானம் ரத்துச் செய்யப் படும். பேருந்து நிலையத்துக்குள் அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.