தென்காசி, நவ. 15 ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் மாய மான் குறிச்சி ஊராட்சி குருவன்கோட்டை பட்டியல் இன அருந்ததியர் மக்கள் கோவில் பயன்பாடு மற்றும் அருந்ததியர் மக்கள் பயன்பாட்டு இடத்தை குருவன்கோட்டை ஊராட்சி ஆக்கிரமிப்பு செய்வதை நிறுத்தி அந்த இடத்தை அருந்ததியர் மக்களுக்கு வழங்கிட கோரி ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆலங்குளம்-வீரகேரளம்புதூர் தாலுகா தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் செவ்வாய் கிழமை தாலுகா செயலாளர் இ.பாலு தலைமையில் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை மாவட்டத் தலைவர் பால்ராஜ் துவக்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசீலன், திராவிட தமிழர் கட்சி மாநிலபொதுச்செயலாளர் கதிரவன், மாநில துணைப் பொதுச்செயலாளர் வீர பாண்டியன், திராவிட கழக நகர செயலா ளர் பெரியார் குமார் ஆகியோர் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணபதி நிறைவுரை ஆற்றினார். தாலுகா பொருளாளர் சந்தனகுமார் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குருவன்கோட்டை கிளை செயலாளர் பால்ராஜ், அம்பேத்கர் கிளை செயலாளர் ஆறுமுகம் ,அனைத்திந்திய மாதர் சங்க தாலுகா செயலாளர் சசிகலா, விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செய லாளர் ராமசாமி, திராவிடர் தமிழர் கட்சி தென்காசி தெற்கு மாவட்ட செயலா ளர் தமிழ்குமரன் ,நெல்லை மாவட்ட செயலாளர் திருகுமரன்,தெற்கு மாவட் டத்தலைவர் மாணிக்கம்,இளைஞர் அணி தலைவர் விஜயகுமார்,குருவன்கோட்டை ஊர் பெரியவர்கள் ரங்கன், கிருஷ்ணன், அண்ணாமலை, பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.