சென்னை,டிச.15- ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி டிசம்பர் 21 அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் தெரிவித் திருக்கிறார். இதுகுறித்து அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தஞ்சை மாவட்டம், திருமண்டங்குடியில் ஆரூரான் சர்க்கரை ஆலையும், கடலூர் மாவட்டம் சித்தூரில் இயங்கி வந்த ஆரூரான் சர்க்கரை ஆலையும், 2019 ஆம் ஆண்டு முதல் காலமாக செயல்படவில்லை. ஆரூரான் சர்க்கரை ஆலை, கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய ரூ.112 கோடி பணம் பாக்கியை வழங்காமல் தேசிய கடன் தீர்ப்பாயத்திற்கு சென்று விட்டது. மேலும், விவசாயிகள் பெயரில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வங்கிகளில் கடன் வாங்கிய ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகமே எடுத்துக் கொண்டது.
இந்த நிலையில், ஆரூரான் சர்க்கரை ஆலையை தேசிய கடன் தீர்ப்பாயத்தின் மூலம் தமிழக ஆளும் கட்சியினருக்கு நெருக் கமான கால்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. ஏற்கனவே கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக கொடுக்காமல் ஆலையை இயக்குவதற்கான பணிகளை துவக்கியுள்ளது. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகை மற்றும் விவசாயிகள் பெயரில் ஆலை நிர்வாகம் பெற்ற கோடிக் கணக்கான ரூபாய் கடன்களுக்கு உரிய தீர்வு காணாமல் ஆலையை திறக்கக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் 30.11.2022 முதல் திருமண்டங்குடி ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு காத்திருக்கும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் தலை வர்களும், அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரி வித்து வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகள் பிரச்சனைக்கு உரிய தீர்வு காண்பதற்காக, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. கரும்பு விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஆலை நிர்வாகம் ஏற்கவில்லை. பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு மாறாக நிர்வவாகத்தின் ஏற்பாட்டில் விவசாயிகள் என்ற போர்வை யில் ஆலையின் ஆதரவாளர்களை பேச்சு வார்த்தையில் பங்கேற்க வைத்து விவசாயி கள் மத்தியில் குழப்பத்தையும், போராடும் விவசாயிகள் மத்தியில் அச்சுறுத்தலையும் ஆலை நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஏற்படுத்தி வருகிறது. இப்பிரச் சனைக்கு உரிய தீர்வை உருவாக்கிட வேண்டிய மாநில அரசு வேடிக்கை பார்ப்பது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, கரும்பு விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக முதல்வர் உடனடியாக தலையிட வேண்டும். ஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகள் பெயரில் வங்கிகளில் பெற்ற கடனிலிருந்து விவசாயிகளை முற்றிலும் விடுவிக்க வேண்டும். கரும்புக்கான பாக்கியை வட்டியுடன் முழு மையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி டிசம்பர் 21 அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கமும் இணைந்து முற்று கையிடும் போராட்டம் நடத்துகிறது. இந்த போராட்டத்திற்கு அனைத்து ஜனநாயக அமைப்புகளும் ஆதரவு அளிக்க வேண்டுகிறோம். இவ்வாறு சாமிநாடராஜன் தெரிவித் துள்ளார்.