சின்னாளப்பட்டி, செப்.1- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வட்டார அளவிலான பள்ளிகளுக்கு இடையே குடியரசு தின குறுவட்ட தடகள போட்டிகள் மாவட்ட விளையாட்டு துறை சார்பாக வெங்கடாஸ்திரி கோட்டை (கே.பி.என்) தனியார் கல்லூரி மைதானத் தில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ரஹமத் கனி தலைமையில் நடைபெற்றது. போட்டிகளில் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் நிலக்கோட்டை நாடார் உயர் நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று முதலிடம் பிடித்தனர். மாணவர்களை பள்ளிச் செயலர் வினேஷ் பிரபு, பள்ளித் தலைமை ஆசிரியை சீத்தாலட்சுமி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.